காதலர் தினம் : கமல் வெளியிட்ட வாழ்த்து பதிவு | அஜித் பட டைட்டிலில் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமாகும் சுந்தர் சி, குஷ்பு மகள் | சல்மான் கான் படத்திலிருந்து காதலர் தின ஸ்பெஷலாக வெளியிடப்பட்ட பாடல் | திகார் சிறையில் இருக்கும் நடிகருக்கு சம்பளம் உயர்த்தி தர கோரிக்கை வைத்த இயக்குனர் பிரியதர்ஷன் | விஸ்வக் சென்னுடன் எந்த வருத்தமும் இல்லை : அர்ஜுன் | ரஜினிகாந்த் சம்பளம் பற்றி பரவும் தகவல் | இரவு 11.30 மணிக்கு சிக்னலில் நடக்கும் கதை | தலைப்புக்காக 'ஏ' சான்றிதழ் கொடுக்கப்பட்ட 'கபுள் பிரண்ட்லி' | சாய்பல்லவி சம்பளம் எகிறியது | ‛மெளனம் பேசியதே' ரீ ரிலீஸ் : மும்பையிலிருந்து வந்த லைலா |

திருமணம், குழந்தை பிறப்புக்கு பின்னர் மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார் ஸ்ரேயா. அதோடு திருமணத்திற்கு முன்பு நடித்ததை போலவே இப்போதும் கிளாமராக நடிப்பதற்கு தான் தயாராக இருப்பதாகவும் ஒரு தகவல் வெளியிட்டிருக்கிறார் ஸ்ரேயா.
இந்த நிலையில் தெலுங்கில் சிரஞ்சீவி நடித்து வரும் போலா சங்கர் என்ற படத்தில் அவரை ஒரு பாடலுக்கு நடனமாட படக்குழு அணுகியிருக்கிறது. ஆனால் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவதற்கே கதாநாயகியாக நடிப்பதற்கு வாங்கும் அளவுக்கு அவர் சம்பளம் கேட்டதாக டோலிவுட்டில் ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது. இதன் காரணமாக அதிர்ச்சி அடைந்த அப்படக்குழுவினர் தொடர்ந்து ஸ்ரேயாவிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஏற்கனவே சிரஞ்சீவியுடன் தாகூர் என்ற படத்தில் ஸ்ரேயா ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.