மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் |

திருமணம், குழந்தை பிறப்புக்கு பின்னர் மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார் ஸ்ரேயா. அதோடு திருமணத்திற்கு முன்பு நடித்ததை போலவே இப்போதும் கிளாமராக நடிப்பதற்கு தான் தயாராக இருப்பதாகவும் ஒரு தகவல் வெளியிட்டிருக்கிறார் ஸ்ரேயா.
இந்த நிலையில் தெலுங்கில் சிரஞ்சீவி நடித்து வரும் போலா சங்கர் என்ற படத்தில் அவரை ஒரு பாடலுக்கு நடனமாட படக்குழு அணுகியிருக்கிறது. ஆனால் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவதற்கே கதாநாயகியாக நடிப்பதற்கு வாங்கும் அளவுக்கு அவர் சம்பளம் கேட்டதாக டோலிவுட்டில் ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது. இதன் காரணமாக அதிர்ச்சி அடைந்த அப்படக்குழுவினர் தொடர்ந்து ஸ்ரேயாவிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஏற்கனவே சிரஞ்சீவியுடன் தாகூர் என்ற படத்தில் ஸ்ரேயா ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.