ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி | 25 ஆண்டுகளுக்கு பிறகு மகனுடன் இணைந்து நடிக்கும் ஜெயராம் |
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய்,கார்த்தி, த்ரிஷா, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் உருவாகியுள்ள படம் பொன்னியின் செல்வன் 2 .இப்படம் இன்று (ஏப். 28) வெளியாகிறது. முதல் நாள் ஷோவை ரசிகர்களுடன் ஜெயம் ரவி காலை 9 மணிக்கு சென்னை குரோம்பேட்டை திரையரங்கிலும், கார்த்தி காலை 9 மணிக்கு சென்னை காசி தியேட்டரிலும் பார்த்தனர். அவர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதேப்போன்று விக்ரம், திரிஷா ஆகியோர் சென்னையில் உள்ள மற்றொரு தியேட்டரில் ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்தனர். மேலும் நடிகை ஐஸ்வர்யா ராய் இந்த படத்தை சென்னையில் இன்று பார்க்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கண்ணாடியை உடைத்த ரசிகர்கள்
சென்னை, வடபழனியில் உள்ள தியேட்டரில் பொதுமக்களுடன் சேர்ந்து, விக்ரம், த்ரிஷா, கார்த்தி, ஜெயராம், துலிபாலா உள்ளிட்ட படக்குழுவினர் படத்தை பார்த்தனர். காசி தியேட்டரில் படத்தை பார்வையிட சென்ற கார்த்தியை பார்க்க ரசிகர்கள் கூட்டம் முண்டியடித்தது. இதனால் தியேட்டரில் உள்ள கண்ணாடி உடைந்து சிலருக்கு காயத்தை ஏற்படுத்தியது. உடைந்த கண்ணாடிக்கான செலவை கார்த்தி ஏற்றுக் கொண்டார்.