சிரஞ்சீவியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ராம்கோபால் வர்மா | பிளாஷ்பேக்: “பராசக்தி”க்கு முன் வெளிவர இருந்த சிவாஜியின் “பூங்கோதை” | அப்பா படத்தையடுத்து மகன் படத்தின் அப்டேட் | ‛ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா உறுதி : எங்கே தெரியுமா? | மீண்டும் ‛டக்கர்' பட இயக்குனருடன் கைகோர்த்த சித்தார்த்! | ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணைந்து நடித்துள்ள கணவர், மனைவி! | ‛ரெட்ட தல' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ரஜினி, அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சம்பளத்துக்கு கட்டுப்பாடு? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி | சைபர் கிரைம் போலீஸில் அனுபமா பரமேஸ்வரன் புகார் | சம்பளத்தை உயர்த்திய நடிகர் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி |

பெண்களை முன்னிலைப்படுத்தும் கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து வருவதில் முக்கிய இடத்தில் இருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். டிரைவர் ஜமுனா, ரன் பேபி ரன், சொப்பன சுந்தரி படங்களுக்கு பிறகு அவர் நடித்து வெளிவர உள்ள படம் 'பர்ஹானா'. இந்த படத்தில் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், அனுமோல், ஐஸ்வர்யா தத்தா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். நெல்சன் வெங்கடேசன் இயக்கி உள்ளார். அடுத்த மாதம் 12ம் தேதி வெளியாகிறது.
இந்த படத்தில் நடித்திருப்பது பற்றி ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியதாவது : 3 பெண்களின் தாயான ஒரு இஸ்லாமிய பெண்ணின் கதை இது. இளம் வயதிலேயே இப்படி நடிக்கலாமா என்கிறார்கள். நல்ல கேரக்டர் என்றால் 100 குழந்தைக்கு தாயாகவும் நடிப்பேன். வித்தியாசமான கதைகளில் விதவிதமான கேரக்டர்களில் நடிக்க வேண்டும் என்பதே என் இலக்கு. இந்த படத்தில் இஸ்லாமிய பெண் என்பதால் ஒரு இஸ்லாமிய தோழியை என் வீட்டுக்கு அழைத்து அவர்களது பழக்க வழக்கங்கள், நடைமுறைகளை கற்றுக் கொண்டேன். முறைப்படி தொழுகை நடத்தவும் கற்றுக் கொண்டேன். இந்த படம் இஸ்லாமிய சமூகத்தையும், இஸ்லாமிய பெண்களையும் உயர்த்தும் படமாக இருக்கும்.
ஆச்சாரமான இஸ்லாமிய குடும்பத்து பெண்ணுக்கு வறுமை. வேறு வழியில்லாமல் அவர் கால் செண்டருக்கு வேலைக்கு செல்கிறாள். அங்கு அவள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை எப்படி சமாளித்து குடும்பத்தையும், தன்னையும் காப்பாற்றுகிறாள் என்பதுதான் படத்தின் கதை. பெண்கள் எந்த சூழ்நிலையிலும் எதிர்நீச்சல் போட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்பதை சொல்லும் படம். என்றார்.