காஞ்சனா 4ம் பாகத்தில் இணைந்த இளம் சீரியல் நடிகை | பாவ்னி - அமீருக்கு ஏப்., 20ல் டும் டும் | கேஜிஎப் 2வை 15 நிமிடத்துக்கு மேல் தொடர்ந்து பார்க்க முடியவில்லை : ராம்கோபால் வர்மா | எம்புரான் படத்தில் நடித்த பாலிவுட் நடிகைக்கு தினசரி மூன்று மணி நேரம் மேக்கப் | 2 வருடம் கழித்து ஓடிடியில் வெளியான மைக்கேல் படத்திற்கு வந்த சோதனை | மகேஷ்பாபுவின் மச்சினிச்சியை கிண்டலடித்த பரா கான் | இங்கிலாந்து திரைப்பட கல்லூரியில் பாடமாக எடுக்கப்பட்ட மம்முட்டியின் பிரம்மயுகம் | த்ரிஷா வீட்டிற்குப் புதிய வரவு இஸ்ஸி | தமிழில் கலக்க வரும் மராத்திய நடிகை | இளையராஜாவின் 'பேரன்பும் பெருங்கோபமும்' |
பெண்களை முன்னிலைப்படுத்தும் கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து வருவதில் முக்கிய இடத்தில் இருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். டிரைவர் ஜமுனா, ரன் பேபி ரன், சொப்பன சுந்தரி படங்களுக்கு பிறகு அவர் நடித்து வெளிவர உள்ள படம் 'பர்ஹானா'. இந்த படத்தில் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், அனுமோல், ஐஸ்வர்யா தத்தா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். நெல்சன் வெங்கடேசன் இயக்கி உள்ளார். அடுத்த மாதம் 12ம் தேதி வெளியாகிறது.
இந்த படத்தில் நடித்திருப்பது பற்றி ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியதாவது : 3 பெண்களின் தாயான ஒரு இஸ்லாமிய பெண்ணின் கதை இது. இளம் வயதிலேயே இப்படி நடிக்கலாமா என்கிறார்கள். நல்ல கேரக்டர் என்றால் 100 குழந்தைக்கு தாயாகவும் நடிப்பேன். வித்தியாசமான கதைகளில் விதவிதமான கேரக்டர்களில் நடிக்க வேண்டும் என்பதே என் இலக்கு. இந்த படத்தில் இஸ்லாமிய பெண் என்பதால் ஒரு இஸ்லாமிய தோழியை என் வீட்டுக்கு அழைத்து அவர்களது பழக்க வழக்கங்கள், நடைமுறைகளை கற்றுக் கொண்டேன். முறைப்படி தொழுகை நடத்தவும் கற்றுக் கொண்டேன். இந்த படம் இஸ்லாமிய சமூகத்தையும், இஸ்லாமிய பெண்களையும் உயர்த்தும் படமாக இருக்கும்.
ஆச்சாரமான இஸ்லாமிய குடும்பத்து பெண்ணுக்கு வறுமை. வேறு வழியில்லாமல் அவர் கால் செண்டருக்கு வேலைக்கு செல்கிறாள். அங்கு அவள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை எப்படி சமாளித்து குடும்பத்தையும், தன்னையும் காப்பாற்றுகிறாள் என்பதுதான் படத்தின் கதை. பெண்கள் எந்த சூழ்நிலையிலும் எதிர்நீச்சல் போட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்பதை சொல்லும் படம். என்றார்.