ஸ்பெயின் கால்பந்தாட்ட மைதானத்தில் வெளியிடப்பட்ட டொவினோ தாமஸ், நஸ்ரியா பட டைட்டில் | 'வாழ' இயக்குனரின் இயக்கத்தில் மஞ்சு வாரியர் நடிக்கும் 'ஹேப்பி லூப்' | ‛கிருஷ்ணாவதாரம்' படத்திற்கு உ.பி.,யில் வரிவிலக்கு அளித்த முதல்வர் யோகி ஆதித்யநாத் | காஞ்சனா 4 படத்தின் அதிரடி போஸ்டர் வெளியானது | மீண்டும் தெலுங்கு படத்தில் யோகி பாபு | ராமாயணா படத்தில் சாய் பல்லவியின் சம்பளம் எவ்வளவு? | மே 18ல் ராம்சரணின் 'பெத்தி' டிரைலர் வெளியீடு | ஏமாற்றம் தந்த ஏப்ரல் மாதம் | 'எல்ஐகே' 200 கோடி வசூலிக்கும் என எதிர்பார்த்தேன் : விக்னேஷ் சிவன் ஆதங்கம் | மீண்டும் வருகிறது 'மணி ஹெய்ஸ்ட்' |

1994ம் ஆண்டு மிஸ் வேர்ல்டு பட்டம் வென்று, தன் அழகால் இந்தியாவை மட்டுமல்லாது உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தவர் ஐஸ்வர்யா ராய். அதற்கடுத்து மூன்று வருடங்களில் 1997ம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய 'இருவர்' தமிழ்ப் படம் மூலம் சினிமாவுலகில் அறிமுகமானார். தொடர்ந்து தமிழில் 'ஜீன்ஸ், கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், ராவணன், எந்திரன், பொன்னியின் செல்வன் 1, 2' ஆகிய படங்களில் நடித்துள்ளார். தன்னை சினிமாவில் அறிமுகப்படுத்திய மணிரத்னம் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளவர் ஐஸ்வர்யா ராய்.
அதை நேற்று மும்பையில் நடைபெற்ற 'பொன்னியின் செல்வன் 2' பத்திரிகையாளர் சந்திப்பிலும் நிரூபித்தார். நிகழ்ச்சியில் பத்திரிகையாளர் ஒருவர் மணிரத்னத்திடம், “ஐஸ்வர்யா ராய் உங்களுக்கு அதிர்ஷ்டகரமான நடிகையா ?,” எனக் கேட்டார்.
அதற்கு மணிரத்னம், “திரைப்பட இயக்குனர்கள் மிகவும் சுயநலவாதிகள். அவர்களது படத்தைப் பற்றி கவனமாக இருப்பார்கள். நான் ஐஸ்வர்யாவை எவ்வளவு நேசித்தாலும், எனது படத்தில் உள்ள கதாபாத்திரத்திற்கு அவர் பொருத்தமாக இருப்பார் என்று நினைத்தால் மட்டுமே அவரிடம் நடிக்கக் கேட்பேன். அவர் அதற்கு சரி என்று சொல்லிவிடுவார்,” எனப் புகழ்ந்து பேசினார்.
அதைக் கேட்டதுமே சில இருக்கைகள் தள்ளி அமர்ந்திருந்த ஐஸ்வர்யா ராய், மணிரத்னத்திடம் வந்து அவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்று கட்டி அணைத்துக் கொண்டார்.
மும்பையில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், இயக்குனர் மணிரத்னம், இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி, ஷோபிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.




