இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று மைத்ரி மூவி மேக்கர்ஸ். அந்நிறுவனம் தற்போது 'புஷ்பா 2' படத்தைத் தயாரித்து வருகிறது.
இந்நிலையில் அந்நிறுவனத்திலும், 'புஷ்பா' பட இயக்குனர் சுகுமார் இல்லத்திலும் கடந்த வாரம் வருமான வரித் துறை மற்றும் அமலாக்கத் துறை ஆகியவை சோதனை நடத்தின. கடந்த ஐந்து நாட்களாக நடைபெற்று வந்த இந்த சோதனை நேற்றுடன் முடிவடைந்துள்ளது.
இதில் பெரிய அளவில் எதுவும் சிக்கவில்லை என்றும், சில சிறிய தவறுகள் நடைபெற்றுள்ளது மட்டும் கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றை விரைவில் சரி செய்ய சோதனையிட்ட துறையினர் கால அவகாசம் கொடுத்துள்ளதாகவும் டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சோதனையால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 'புஷ்பா 2' படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாகியுள்ளது என்றும் சொல்கிறார்கள்.