நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா, பஹத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 'புஷ்பா' பாகம் 1. தெலுங்கு மட்டுமல்லாது தென்னிந்திய மற்றும் ஹிந்தியிலும் வரவேற்பை பெற்றது. தற்போது இதன் இரண்டாம் பாகம் இன்னும் பிரமாண்டமாய் அதேகூட்டணி உடன் தயாராகி வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் டைட்டில் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் இந்த படம் குறித்து ஆந்திர செம்மர கடத்தல் அதிரடிப்படை முன்னாள் ஜ. ஜி. காந்தாராவ் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‛‛செம்மரம் கடத்தலை தடுக்க ஆந்திர, தமிழ்நாடு, கர்நாடக அதிகாரிகள் எடுத்த முயற்சிகளை தவறாக சித்தரிக்க வேண்டாம். செம்மர கடத்தல்காரனை ஹீரோவாக காட்டிவிட்டு, போலீசாரை லஞ்சம் வாங்குவதாக காட்டியது வருத்தம் அளிக்கிறது. புஷ்பா 2 பாகத்தில் போலீசாரின் தியாகத்தை காண்பிக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.