எனக்கு நீதி வாங்கித் தாங்க : மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி முதல்வரிடம் முறையிட்ட ஜாய் கிரிஸ்டலா | நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி | பராசக்தி படத்தில் ராணா நடிப்பதை உறுதிப்படுத்திய சிவகார்த்திகேயன் | மதராஸி - காந்தி கண்ணாடி படங்களின் மூன்று நாள் வசூல் எவ்வளவு? | அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ் | சிரஞ்சீவியுடன் இளமையான தோற்றத்தில் நடனமாடும் நயன்தாரா | கதையின் நாயகன் ஆனார் முனீஷ்காந்த் | வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம் | பிளாஷ்பேக்: 30 ஆண்டுகளுக்கு முன்பு கலக்கிய கோர்ட் டிராமா | பிளாஷ்பேக் : முதல் நட்சத்திர வில்லன் |
நடிகர் ஜெயராம் தற்போது மலையாளத்தில் நடிப்பதை விட தமிழ், தெலுங்கில் தான் பிசியாக நடித்து வருகிறார். தெலுங்கில் மட்டும் ரவிதேஜா, விஜய் தேவரகொண்டா, பிரபாஸ் என முன்னணி ஹீரோக்களின் படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார் ஜெயராம். தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தில் தனது நகைச்சுவை கலந்த நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த ஜெயராம் விரைவில் ஏப்ரல் 28ல் வெளியாக இருக்கும் இந்த படத்தின் இரண்டாம் பாக ரிலீஸூக்காக தயாராகி வருகிறார்,
இந்த நிலையில் தற்போது தனது மனைவி பார்வதியுடன் சபரிமலை சென்று தரிசனம் செய்து வந்துள்ளார் ஜெயராம். சித்திரை விஷுவை முன்னிட்டு அவர் சபரிமலை தரிசனத்திற்காக சென்று வந்ததாக சொல்லப்படுகிறது. ஆனாலும் கடந்த செப்டம்பரில் பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியாவதற்கு முன்பாக இதேபோன்று நடிகர் ஜெயம் ரவியுடன் அவர் சபரிமலை சென்று வழிபட்டு வந்தார் என்பதால், இந்த முறையும் பொன்னியின் செல்வன் 2 படத்தின் வெற்றிக்காக அவர் சபரிமலை சென்று வந்துள்ளதாகவே தெரிகிறது