கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி அடுத்த வாரம் வெளியாக உள்ள 'பொன்னியின் செல்வன் 2' படத்திற்கான புரமோஷன் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
கடந்த வருடம் முதல் பாகம் வெளிவந்த போது, த்ரிஷா, விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்டோர் அவர்களது டுவிட்டர் தளத்தில் அவர்களது கதாபாத்திரப் பெயர்களை மாற்றியிருந்தார்கள். படம் ஓடிய வரை அப்படியேதான் இருந்தது.
அது போலவே இப்போது இரண்டாம் பாகம் வெளிவர உள்ள நிலையில் நேற்று த்ரிஷா, ஜெயம் ரவி ஆகியோர் தங்களது பெயர்களை நீக்கி கதாபாத்திரப் பெயர்களான குந்தவை, அருண்மொழி வர்மன் என மாற்றினர். ஆனால், டுவிட்டர் தளத்தின் புதிய விதிகளின்படி அவர்களது 'ப்ளூ டிக்' நீக்கப்பட்டது.
இந்நிலையில் இப்போது த்ரிஷா அவரது கதாபாத்திரப் பெயரான 'குந்தவை' என்பதை கைவிட்டுவிட்டு 'த்ரிஷா' என்பதற்கே மாறியுள்ளார். ஜெயம் ரவி இன்னும் மாற்றாமல் இருக்கிறார்.