பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் | காத்திருந்த இயக்குனர்களுக்கு அதிர்ச்சியளித்த ‛அமரன்' | ‛ஏஸ்' எனக்கு ஸ்பெஷலான படம்: ருக்மணி வசந்த் | ‛‛100 வருஷம் ஆனாலும் பாசம் மாறாது'' : மதுரை மக்கள் பற்றி விஷால் கருத்து | ‛‛எனக்கு பிடித்த மதுரையும், மீனாட்சி அம்மனும்...'': ஐஸ்வர்யா லட்சுமி நெகிழ்ச்சி | அம்ரிதா பிரிதமின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க விரும்பும் நிம்ரத் கவுர் |
தமிழ்ப் புத்தாண்டு தினமாக ஏப்ரல் 14ம் தேதியன்று ஐந்து நேரடி தமிழ்ப் படங்கள் வெளியாகின. அன்றைய தினம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட 'தமிழரசன், யானை முகத்தான்' ஆகிய இரண்டு படங்கள் திடீரென வெளியீட்டுத் தேதியை மாற்றின. ஏப்ரல் 21ம் தேதியன்று வெளியாகும் என்று அன்றைய தினமே விளம்பரமும் செய்தார்கள். அறிவித்தபடி இந்த 21ம் தேதி அவை வெளியாகுமா என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும்.
அந்த இரண்டு படங்கள் தவிர பாண்டியகர்களைப் பற்றிய சரித்திரப் படமான 'யாத்திசை', விமல் நடித்துள்ள 'தெய்வ மச்சான், குலசாமி' ஆகிய படங்களும், மற்றும் 'ஜம்பு மகரிஷி' என்ற படமும் ஏப்ரல் 21ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளன. அறிவிக்கப்படும் படங்கள் கடைசி நேரத்தில் வெளியீட்டிலிருந்து பல்வேறு காரணங்களால் பின் வாங்குகின்றன.
அடுத்த வாரம் ஏப்ரல் 28ம் தேதி 'பொன்னியின் செல்வன் 2' படம் வெளிவருவதால் அதற்கடுத்த இரண்டு வாரங்களுக்குத் தியேட்டர்கள் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். அதனால், இந்த வார வெளியீட்டில் எந்தப் பின்வாங்கலும் இருக்காது என்றே தெரிகிறது.