பராசக்தி முதல் பாடலான 'அடி அலையே' வெளியீடு | தயாரிப்பாளர்களுக்கு கூட பாடல் உரிமையை வழங்கியது இல்லை: இளையராஜா | 'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு : நவ., 8ல் முதல் பாடல் | சத்ய சாய் பாபாவின் மகிமையை சொல்லும் ‛அனந்தா' : நவ., 23ல் வெளியீடு | கிஸ் முதல் நெட்வொர்க் வரை... இந்த வாரா ஓடிடி ரிலீஸ்...! | ''பீரியட் படம் பண்ணுவது தனி அனுபவம்... டைம் மிஷின் மூலம் அந்த காலம் செல்வது மாதிரி'': துல்கர் சல்மான் | ரோஜா 'கம்பேக்': 'லெனின் பாண்டியன்' படத்தில் நடிக்கிறார் | மணிரத்னம் படம் : சிம்புவிற்கு பதில் விஜய் சேதுபதி | ரஜினிகாந்த்தை 'தலைவர்' எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன் | ஹரிஷ் கல்யாண் அடுத்து நடிக்கும் இரண்டு படங்கள் |

நடிகர் ஜீவா, தமிழ் கலை டாட் காம் என்ற செயலி அறிமுக விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும் போது, கலைஞர்களுக்கு சாதி மதம் இல்லை. ஜிப்ஸி என்ற படத்தில் நடித்த போது இந்தியா முழுவதும் பயணித்தேன். அந்த சமயத்தில் அனைத்து நாட்டுபுற கலைஞர்களையும் சந்திக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. இந்தியா முழுவதும் பல்வேறு மொழிகள் உள்ளன. என்றாலும் கலைகளுக்கு மொழிகள் இல்லை என்று கூறினார் ஜீவா. மேலும் நான் நடித்த டிஷ்யூம் படத்தில் நாங்கள் கைத்தட்டலுக்கு ஏங்குகிற ஜாதி என்று ஒரு டயலாக் பேசி இருப்பேன்.
அதேபோல்தான் அனைத்து கலைஞர்களும் கைதட்டலுக்கு ஏங்குவார்கள் என்று பேசிய ஜீவா, அதையடுத்து மீடியாக்களை சந்தித்தபோது, கலைக்கு மொழி இல்லை என்று சொல்கிறீர்கள். ஆனால் தமிழ் கலை டாட் காம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதே? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. கலைக்கு மொழிகள் இல்லை. தாரை தப்பட்டை காஷ்மீரில் இருக்காது. காலநிலைக்கு ஏற்றவாறு மாறுபடும். அதாவது நம்முடைய தனுஷ் ஹாலிவுட்டில் நடிக்கிறாரே அதே மாதிரி தான் இதுவும். இதனை நாம் புரிந்து கொள்ளாமல் இருப்பதால்தான் வளராமல் இருக்கிறோம் என்று கூறினார் நடிகர் ஜீவா.