'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சீனு ராமசாமி இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் விஜய் சேதுபதி. அதன் பிறகு பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்த அவர் தற்போது தனது ஐம்பதாவது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை குரங்கு பொம்மை என்ற படத்தை இயக்கிய நிதிலன் இயக்கி வருகிறார். பழிவாங்கும் கதையில் உருவாகும் இந்த படத்தில் விஜய் சேதுபதி இரண்டு மாறுபட்ட வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு 50 நாட்கள் நடந்து முடிந்து விட்டதாகவும், விஜய் சேதுபதி இன்னும் 10 நாட்கள் மட்டுமே நடிக்க வேண்டிய உள்ளது என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படம் என்பதால் இதுவரை அவர் நடித்த படங்களில் இருந்து கதை மற்றும் கதாபாத்திரம் இரண்டுமே வித்தியாசமாக இருக்கும் என்று இயக்குனர் நிதிலன் தெரிவித்திருக்கிறார்.