நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
எழுத்தாளர்களின் நாவல்கள், சிறுகதைகள் திரைப்படமாவது அதிகரித்துள்ளது. கல்கி எழுதிய பொன்னியின் செல்வன், ஜெயமோகன் எழுதிய துணைவன் (விடுதலை), வேல ராமமூர்த்தி எழுதிய குற்றப்பரம்பரை நாவல்கள் படமாகி வருகிறது. இந்த நிலையில் துரை குணா எழுதிய 'ஊரார் வரைந்த ஓவியம்' என்ற நாவல் 'அம்புநாடு ஒம்பது குப்பம்' என்ற பெயரில் சினிமாவாகிறது.
இதில் சங்ககிரி மாணிக்கம், ஹர்ஷிதாஸ்ரீ, புதுமுகங்கள் விக்ரம், சுருதி, பிரபுமாணிக்கம் மற்றும் பலர் நடித்துள்ளனர். மகேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார், அந்தோணி தாசன், ஜேம்ஸ் வசந்தன் இசை அமைத்துள்ளனர்.
ஜி.ராஜாஜி இயக்கி உள்ளார். படம் பற்றி அவர் கூறும்போது “சமூக ஒடுக்குமுறை சம்பந்தப்பட்ட ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட "ஊரார் வரைந்த ஓவியம்" என்கிற நாவலைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ள படம். புதுக்கோட்டை மற்றும் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ள இப்படம் விரைவில் திரைக்கு வருகிறது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் வெற்றிமாறன் வெளியிட்டார்” என்றார்.