அன்னை இல்லத்தில் எனக்கு எந்த உரிமையும் இல்லை: ராம்குமார் பிரமாண மனு தாக்கல் | பாவனா தயாரிக்கும் படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகும் அனிமல் பட இசையமைப்பாளர் | போதை வழக்கில் முன்ஜாமின் கோரிய மனுவை வாபஸ் பெற்ற மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் | 'ஆலப்புழா ஜிம்கானா' படக்குழுவினரை பாராட்டிய சிவகார்த்திகேயன் | மே 9ல் ரிலீஸ் ஆகும் திலீப்பின் 150வது படம் | ஓடிடி.,க்கு அதிக விலைக்கு போன டாப் தமிழ் படங்கள் | 20 ஆண்டுகளாக தோழிகளாக வலம்வரும் திரிஷா - சார்மி! | 'குபேரா' படத்தின் புதிய அப்டேட்! | அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! |
எழுத்தாளர்களின் நாவல்கள், சிறுகதைகள் திரைப்படமாவது அதிகரித்துள்ளது. கல்கி எழுதிய பொன்னியின் செல்வன், ஜெயமோகன் எழுதிய துணைவன் (விடுதலை), வேல ராமமூர்த்தி எழுதிய குற்றப்பரம்பரை நாவல்கள் படமாகி வருகிறது. இந்த நிலையில் துரை குணா எழுதிய 'ஊரார் வரைந்த ஓவியம்' என்ற நாவல் 'அம்புநாடு ஒம்பது குப்பம்' என்ற பெயரில் சினிமாவாகிறது.
இதில் சங்ககிரி மாணிக்கம், ஹர்ஷிதாஸ்ரீ, புதுமுகங்கள் விக்ரம், சுருதி, பிரபுமாணிக்கம் மற்றும் பலர் நடித்துள்ளனர். மகேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார், அந்தோணி தாசன், ஜேம்ஸ் வசந்தன் இசை அமைத்துள்ளனர்.
ஜி.ராஜாஜி இயக்கி உள்ளார். படம் பற்றி அவர் கூறும்போது “சமூக ஒடுக்குமுறை சம்பந்தப்பட்ட ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட "ஊரார் வரைந்த ஓவியம்" என்கிற நாவலைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ள படம். புதுக்கோட்டை மற்றும் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ள இப்படம் விரைவில் திரைக்கு வருகிறது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் வெற்றிமாறன் வெளியிட்டார்” என்றார்.