நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
தெலுங்கில் மிகப்பெரிய தயாரிப்பாளரான தில் ராஜு தமிழ் படங்கள் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறார். ஒரு பக்கம் தெலுங்கில் மிகப்பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்துக் கொண்டே இந்த வருடம் தமிழில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தையும் தயாரித்தார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியான இந்த படம் அவர் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பையும் வசூலையும் கொடுக்கவில்லை. இருந்தாலும் விட்ட இடத்திலேயே பிடிக்க வேண்டும் என்கிற முனைப்புடன் அடுத்ததாக தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் ஒன்றை அவர் தயாரிக்க இருப்பதாக தற்போது தெலுங்கு திரையுலகில் ஒரு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு சிரஞ்சீவி நடிப்பில் தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற வால்டர் வீரய்யா படத்தை இயக்கிய இயக்குனர் பாபி தான் இந்த படத்தை இயக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஜெயிலர் படத்தை முடித்துவிட்டு தனது மகள் ஐஸ்வர்யா இயக்கி வரும் லால் சலாம் படத்தின் சில நாட்கள் படப்பிடிப்பில் ரஜினிகாந்த் கலந்துகொள்ள இருக்கிறார். அதை தொடர்ந்து ஞானவேல் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினிகாந்த்.
தெலுங்கு திரையரங்கில் இருந்து வெளியான தகவல்களின்படி ஞானவேல் படத்திலும் தில் ராஜு தயாரிக்கும் படத்திலும் ஒரே சமயத்தில் மாறிமாறி அவர் நடிக்க இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் சில நாட்களில் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது..