நன்றி சொல்ல வார்த்தைகள் போதவில்லை : அஜித் நெகிழ்ச்சி | ''எங்களுக்கு 'வாழ்க' சொன்னது போதும்! நீங்க எப்ப வாழப்போறீங்க...?'': துபாயில் அஜித் பேட்டி | என் குணம் இப்படி தான்... ஆசையை சொன்ன அதிதி ஷங்கர் | துருவ நட்சத்திரம் படத்திற்கு யாரும் உதவவில்லை: கவுதம் மேனன் வருத்தம் | வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்திய 'விடுதலை': சூரி நெகிழ்ச்சி | 'ஜெயம்' வேண்டாம்; ரவி போதும்: அறிக்கை வெளியிட்டு அறிவிப்பு | ராம் பொத்தினேனி படத்தில் மோகன்லால்? | மீண்டும் ரீ ரிலீஸ் ஆகும் பாட்ஷா! | ஜனவரி 17ல் தமிழில் வெளியாகும் பாலகிருஷ்ணாவின் 'டாக்கு மகாராஜ்' | முதல் நாள் வசூல்- வணங்கானை முந்திய விஷாலின் மதகஜராஜா! |
தமிழில் பிடிச்சிருக்கு என்ற படத்தில் அறிமுகமானவர் விசாகா சிங். அதன் பிறகு சந்தானம் நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா உட்பட சில படங்களில் நடித்தவர் தற்போது தெலுங்கு, ஹிந்தியில் தலா ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருக்கும் விசாகா சிங், அது குறித்த ஒரு தகவலையும் வெளியிட்டிருக்கிறார்.
அதில், என்னால் நீண்ட நேரம் கீழே மற்றும் வெளியே இருக்க முடியாது. கால மாற்றத்தால் அடிக்கடி நடக்கும் வினோதமான சம்பவங்கள் விபத்து மற்றும் உடல்நல பிரச்சினைகளுக்கு பிறகு ஆரோக்கியமான கோடையை நோக்கி உடல்நிலை திரும்புகிறது. ஏப்ரல் மாதம் எப்போதுமே எனக்கு புத்தாண்டாகவே இருக்கிறது. ஒருவேளை இது புதிய நிதியாண்டு என்பதாலோ என்னவோ எனது பிறந்த மாதத்தில் முன் மாதம் என்பதால் கோடை நாட்களை நோக்கி ஆர்வத்துடன் முன்னேறி வருகிறேன் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
இதை வைத்து பார்க்கும் போது, கால மாற்றத்தால் ஏற்படும் உடல் பிரச்சினையால் அவர் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர் பூரண நலம் பெற ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.