ஆண்களை மட்டுமே தப்பு சொல்லக் கூடாது! ரவி மோகனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த நடிகை மீரா சோப்ரா! | ராகவா லாரன்ஸ், அஜய் ஞானமுத்து புதிய கூட்டணி | ஜூனியர் என்டிஆரின் 43வது பிறந்தநாள்: ரசிகர்கள் தள்ளுமுள்ளு! | மீண்டும் ஞானவேல் இயக்கத்தில் நடிக்கும் சூர்யா! | சபரிமலை ஐயப்பனுக்கு மாலை போட்டு விரதம் ஆரம்பித்த ரவி மோகன்! | சூர்யா, த்ரிஷாவுக்கு நிம்மதியை கொடுத்த ‛கருப்பு' வெற்றி | கேன்ஸ் திரைவிழாவில் தாழ் திறவா | ராம் பொதினேனி படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா | நடிகர் அவதாரம் எடுக்கும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்? | ‛இம்மார்ட்டல்' படப்பிடிப்பு நிறைவு |

தமிழில் பிடிச்சிருக்கு என்ற படத்தில் அறிமுகமானவர் விசாகா சிங். அதன் பிறகு சந்தானம் நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா உட்பட சில படங்களில் நடித்தவர் தற்போது தெலுங்கு, ஹிந்தியில் தலா ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருக்கும் விசாகா சிங், அது குறித்த ஒரு தகவலையும் வெளியிட்டிருக்கிறார்.
அதில், என்னால் நீண்ட நேரம் கீழே மற்றும் வெளியே இருக்க முடியாது. கால மாற்றத்தால் அடிக்கடி நடக்கும் வினோதமான சம்பவங்கள் விபத்து மற்றும் உடல்நல பிரச்சினைகளுக்கு பிறகு ஆரோக்கியமான கோடையை நோக்கி உடல்நிலை திரும்புகிறது. ஏப்ரல் மாதம் எப்போதுமே எனக்கு புத்தாண்டாகவே இருக்கிறது. ஒருவேளை இது புதிய நிதியாண்டு என்பதாலோ என்னவோ எனது பிறந்த மாதத்தில் முன் மாதம் என்பதால் கோடை நாட்களை நோக்கி ஆர்வத்துடன் முன்னேறி வருகிறேன் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
இதை வைத்து பார்க்கும் போது, கால மாற்றத்தால் ஏற்படும் உடல் பிரச்சினையால் அவர் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர் பூரண நலம் பெற ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.