குல தெய்வம் கோயிலுக்கு போங்க : ரசிகர்களுக்கு தனுஷ் அட்வைஸ் | முதல்வரின் வேண்டுகோளை கண்டிப்பா நிறைவேற்றுவேன்: இளையராஜா | மதராஸி, லோகா படங்களின் பாக்ஸ் ஆபீஸ் தகவல் வெளியானது! | 'கிஸ்' படத்தில் கதை சொல்லியாக குரல் கொடுத்த விஜய் சேதுபதி! | கும்கி- 2 படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட பிரபு சாலமன்! | ஓடிடியிலும் விமர்சனங்களை சந்தித்த கூலி! | பிளாஷ்பேக்: பல முதன்மைகளை உள்ளடக்கிய முழுநீள நகைச்சுவைச் சித்திரமாக வெளிவந்த சிவாஜி திரைப்படம் | நானி உடன் மோத தயாராகும் மோகன் பாபு! | சம்யுக்தா கைவசம் இத்தனை படங்களா? | மகாநதி சீரியலில் நடிக்க பயந்த ஷாதிகா! |
நடிகர் விஜய் தனது ரசிகர்களை ஒன்றிணைக்கும் வகையில் மக்கள் இயக்கத்தை உருவாக்கி உள்ளார். அவ்வப்போது நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார். விஜய் மக்கள் இயக்கம் எதிர்காலத்தில் அரசியல் கட்சியாக மாற வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், தற்போது மன்ற நிர்வாகிகளுக்கு விஜய் பிறப்பித்துள்ள ஒரு உத்தரவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது விஜய் மக்கள் இயக்க ஆலோசனை கூட்டம் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்தப்பட வேண்டும். மாவட்டம், நகரம், ஒன்றியம் ஆகிய பகுதிகளில் உள்ள நிர்வாகிகள் அனைவரும் மாவட்ட அளவில் நடக்கும் கூட்டங்களில் பங்கேற்க வேண்டும். அதோடு விஜய் மக்கள் இயக்கத்தில் உள்ள மகளிர் அணி, விவசாய அணி உட்பட்ட அனைத்து அணிகளில் உள்ள நிர்வாகிகளும் மாவட்ட அளவில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொண்டு விஜய் மக்கள் இயக்கத்தின் எதிர்காலம் குறித்து ஆலோசனை செய்ய வேண்டும் என்று தற்போது விஜய் தனது மன்ற தலைவர் புஸ்ஸி ஆனந்த் மூலம் ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார் . இது விஜய் மக்கள் இயக்கத்தை கட்டமைப்புடன் அடுத்த லெவலுக்கு எடுத்து செல்லும் முயற்சி என்றும் கூறப்படுகிறது.