கதைகளை புனைவதால் வருத்தம்: பாடகி சைந்தவி | மீண்டும் அயோத்தி மந்திர மூர்த்தி இயக்கத்தில் நடிக்கும் சசிகுமார்! | 4 மொழிகளில் திரைக்கு வரும் அமலாபாலின் ‛லெவல் கிராஸ்' | இந்தியன்-2 படத்தோடு வெளியாகும் இந்தியன்- 3 படத்தின் டிரைலர்! | சர்ச்சையாக பேசிய திமுக பேச்சாளர்: நடிகை ராதிகா புகார் | மோசடி வழக்கில் நயன்தாரா பட இயக்குனர் கைது | வித்தியாசமான ஹேர்ஸ்டைலுக்கு மாறிய கீர்த்தி சுரேஷ் | ரிலீஸ் செய்ய மறுத்த ஆத்திரத்தில் பேஸ்புக்கில் படத்தை வெளியிட்ட டொவினோ தாமஸ் பட இயக்குனர் | கார் விபத்தில் சிக்கிய லியோ நடிகரின் குடும்பம் ; உறவினர் ஒருவர் பலி | இயக்குனரின் கணவர் பேட்டியால் சிக்கலில் மம்முட்டி |
குணசேகரன் இயக்கத்தில் சமந்தா கதையின் நாயகியாக நடித்துள்ள படம் சாகுந்தலம். அவருக்கு ஜோடியாக தேவ் மோகன் நடித்துள்ள இப்படம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் வெளியாக உள்ளது. இதனால் தற்போது இந்தியா முழுக்க சென்று சாகுந்தலம் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் சமந்தா. இந்த நிலையில் இப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்ற போது சமந்தாவை போட்டோ எடுப்பதற்கு போட்டோகிராபர்கள் சூழ்ந்துள்ளார்கள். அதோடு அந்த போட்டோகிராபர்கள் பிளாஷ் போட்டு எடுத்ததால் டென்ஷனான சமந்தா தனது கண்களை மூடிக்கொண்டு அங்கிருந்து வெளியேறி இருக்கிறார். இதனால் இந்த பிரமோஷன் நிகழ்ச்சியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. நடிகை சமந்தா மயோசிடிஸ் எனும் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வருகிறார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.