அடுத்த ஐந்து மாதங்களுக்கு வரப் போகும் புதுப் படங்கள் அசத்துமா? | பாலியல் குற்றவாளிகளுக்கு இந்த மாதிரி தண்டனை வழங்க வேண்டும் : வரலட்சுமி | கமலின் 'விக்ரம்' பட வசூலை முறியடிக்குமா 'தக்லைப்'? | சூரி உடன் நடித்தது பெருமை : ஐஸ்வர்யா லட்சுமி | நினைத்து கூட பார்க்கவில்லை : அதிதி ஷங்கர் | ரெட்ரோ' வில் காட்சிகள் நீக்கம் : பாலிவுட் நடிகர் வருத்தம் | 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹீரோவான நவீன் சந்திரா | இரு மொழி படம் இயக்கும் விஜய் மில்டன் | நாளை படப்பிடிப்புகள் நடக்கும் : தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு | பிளாஷ்பேக்: பாடலுக்காக திரைக்கதையை மாற்றிய கே.எஸ்.ரவிகுமார் |
குணசேகரன் இயக்கத்தில் சமந்தா கதையின் நாயகியாக நடித்துள்ள படம் சாகுந்தலம். அவருக்கு ஜோடியாக தேவ் மோகன் நடித்துள்ள இப்படம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் வெளியாக உள்ளது. இதனால் தற்போது இந்தியா முழுக்க சென்று சாகுந்தலம் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் சமந்தா. இந்த நிலையில் இப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்ற போது சமந்தாவை போட்டோ எடுப்பதற்கு போட்டோகிராபர்கள் சூழ்ந்துள்ளார்கள். அதோடு அந்த போட்டோகிராபர்கள் பிளாஷ் போட்டு எடுத்ததால் டென்ஷனான சமந்தா தனது கண்களை மூடிக்கொண்டு அங்கிருந்து வெளியேறி இருக்கிறார். இதனால் இந்த பிரமோஷன் நிகழ்ச்சியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. நடிகை சமந்தா மயோசிடிஸ் எனும் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வருகிறார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.