செட்டில் பண்ண வேண்டி இருக்கு, படத்தை ஓட வையுங்க : இயக்குனர் விக்னேஷ் சிவன் | கருப்பு படத்திற்கு சொந்த குரலில் டப்பிங் பேசிய த்ரிஷா | ஜனநாயகன் லீக் விவகாரம்: கோர்டில் முறையிட்ட தயாரிப்பு நிறுவனம் | ராமாயணா முதல் பாகத்தில் ரன்பீருடன் ஒரு காட்சியில் கூட இணைந்து நடிக்கவில்லை : யஷ் | ஹாய் படத்தின் கண்ணங்குழியா முதல் சிங்கிள் ஏப்ரல் 21ல் ரிலீஸ்! | மூன்று பாகங்களாக உருவாகும் ‛கிருஷ்ணவதாரம்' : மே 7ல் முதல்பாகம் ரிலீஸ் | கங்கை அமரன், சிவாஜி பேரன் நடித்த 'லெனின் பாண்டியன்' டிரைலர் வெளியீடு | நாலு ஹீரோயின் நடிக்கும் படம் : ஆனா, யாருமே ஹீரோயின் இல்ல | 'வாழ 2' வெற்றியை தொடர்ந்து 'வாழ 3' உடனடி அறிவிப்பு | நடிகர் விஜய் மனைவி பிரஸ்மீட் அடுத்த வாரம் நடக்குதா? |

கிரைம் நாவல்கள் மூலம் கடந்த பல ஆண்டுகளாக புகழ் பெற்ற எழுத்தாளராக இருப்பவர் ராஜேஷ்குமார். 1500க்கும் மேற்பட்ட நாவல்கள், 2000க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியவர். அவரது நாவல்கள் சில திரைப்படங்களாகவும், டிவி தொடர்களாகவும் வெளிவந்துள்ளன.
சமீப காலங்களாக கதைத் திருட்டுகள் அதிகம் நடந்து, அவை சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. சமீபத்தில் வெளிவந்த 'அயோத்தி, விடுதலை' ஆகிய படங்களும் அந்த சர்ச்சையில் சிக்கியுள்ளன.
'விடுதலை' படத்தின் பல காட்சிகள், கதாபாத்திரங்கள் ச.பாலமுருகன் எழுதிய 'சோளகர்தொட்டி' நாவலின் தாக்கத்தில் இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. அது குறித்து அந்நாவலை எழுதிய பாலமுருகன் அவரது பேஸ்புக்கில் ஒரு பதிவிட்டிருந்தார்.
அதில் கமெண்ட் பகுதியில் எழுத்தாளர் ராஜேஷ்குமாரும், “என்னுடைய பல நாவல்களின் அஸ்திவாரங்களில் இது போன்ற விதி மீறல் கட்டிடங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. பார்த்துக் கொண்டே நகர்ந்து விடவேண்டியதுதான். சட்டத்தை நாடினால் நட்டம் நமக்குத்தான்,” என்று தன்னுடைய வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார்.
எத்தனையெத்தனை படங்களில் ராஜேஷ்குமார் எழுதிய நாவல்களின் காட்சிகள் இடம் பெற்றிருந்தால் அவர் இந்த அளவிற்கு வருத்தப்பட்டு பதிவு செய்திருப்பார்.




