தக் லைப் டிரைலர் வெளியீடு : நீயா... நானா... என மோதும் கமல், சிம்பு! | தெலுங்கு தயாரிப்பு, இயக்குனர் படத்தில் ரஜினிகாந்த்? | பால்கே பயோபிக் ; ராஜமவுலி குழுவினர் சந்திக்கவேயில்லை - பால்கே பேரன் | குபேரா - தமிழக உரிமை வியாபாரம் எவ்வளவு தெரியுமா ? | இளையராஜா 'ரெபரன்ஸ்' : இரண்டு 200 கோடிகளை அள்ளிய மலையாளப் படங்கள் | குடும்பத்தை பிரித்தேனா... பொய்யான குற்றச்சாட்டு : மகளுடன் சேர்ந்து வாழ ரவி மோகனுக்கு மாமியார் கோரிக்கை | மே 24ல் ஜப்பானில் ரிலீஸ் ஆகும் டூரிஸ்ட் பேமிலி | புதிய படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த தமன்னா! | சிரஞ்சீவியின் 157-வது படத்தில் இணைந்த நயன்தாரா : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | டிடி நெக்ஸ்ட் லெவல், மாமன் படங்களின் முதல் நாள் வசூல் நிலவரம் என்ன? |
கடந்த ஒருவாரமாகவே இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு மெல்ல அதிகரித்து வருகிறது. இந்திய முழுக்க பாதிப்பு நாலாயிரத்தை தாண்டி இருப்பதாக தகவல் வெளியானது. அதோடு தமிழகத்திலும் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் பொது சுகாதாரத்துறை இயக்குனர் கூறுகையில், தமிழகத்தில் கொரோனா பரவல் அதிக அளவில் இல்லை என்பதால் பெரிய கட்டுப்பாடுகள் தற்போதைக்கு தேவையில்லை. என்றாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைவரும் மாஸ்க் அணிவது கட்டாயம் ஆகிறது. ஏற்கனவே மருத்துவமனைகளில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், திரையரங்கங்கள், ஏசி அரங்கங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளின்போது அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் இனிமேல் தியேட்டர்களுக்கு செல்லும் ரசிகர்கள் கட்டாயமாக மாஸ்க் அணிந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தெரிகிறது.