ரேஸில் கார் பழுது : அஜித்தின் பாசிட்டிவ் ரிப்ளே...! | 48 மணிநேரம் தூக்கமில்லை : ஷாலினி பாண்டே | 16 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடை செய்ய வேண்டும் : சோனு சூட் | ஆளுமை உரிமை கேட்டு பவன் கல்யாண் வழக்கு | விவாகரத்து வதந்தி : கடும் கோபத்தை வெளிப்படுத்திய அபிஷேக் பச்சன் | சூர்யாவின் கருப்பு ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போகிறதா? | ரெட்ட தல படத்தின் டார்க் தீம் பாடல் வெளியானது | சோசியல் மீடியாவில் போட்ட பதிவால் ட்ரோலில் சிக்கிய தமன் | இந்த வார ரிலீஸ் : தியேட்டர்களைக் காப்பாற்றும் 'படையப்பா' | பிறந்தநாள் வாழ்த்து கூறியவர்களுக்கு ரஜினிகாந்த் நன்றி |

ஜீ தமிழில் ஒளிபரப்பான 'என்றென்றும் புன்னகை' சீரியலின் மூலம் அறிமுகமான நிதின் கிரிஷ், தற்போது செவ்வந்தி தொடரில் கார்த்திக் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இந்த தொடரில் ஹீரோவாக நடித்து வந்த ராகவ் இறந்து போனது போல் காண்பிக்கப்பட்டதால், நிதின் கிரிஷ் கதாபாத்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் கிடைக்கும் என்று தான் ரசிகர்கள் நம்பினர்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன் நிதின் கிரிஷ் செவ்வந்தி தொடரிலிருந்து விலகுவதாக தனது இண்ஸ்டாகிராமில் தெரிவித்திருந்தார். அவர் வெளியிட்டிருந்த பதிவில், 'கனத்த இதயத்துடன் செவ்வந்தி சீரியலிலிருந்து வெளியேறுகிறேன். என்னிடம் சொல்லியது போல் எனது கதாபாத்திரத்திற்கான முக்கியத்துவத்தை தரவில்லை. நடிகராக என்னுடைய திறமையை வெளிக்காட்டுவதற்கான வாய்ப்புகள் எனக்கு கிடைக்கவில்லை. புரொமோஷன்களுக்கு கூட அழைக்கவில்லை. விரைவில் என்னுடைய இரண்டு புதிய ப்ராஜெக்ட் பற்றி அறிவிக்கிறேன்' என்று பதிவிட்டிருந்தார்.
அந்த பதிவை சில மணி நேரங்களுக்குள் நீக்கிவிட்டு மற்றொரு பதிவில் லீகல் காரணங்களுக்காக பழைய பதிவை நீக்கியதாகவும், புதியதை நோக்கி நகர்ந்து செல்வதற்கான நேரம் விரைவில் இரண்டு புதிய அறிவிப்புகள் வரும் என்றும் செவ்வந்தி சீரியலை விட்டு விலகியதை நிதின் க்ரிஷ் உறுதிபடுத்தியுள்ளார்.




