பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் |
ஜீ தமிழில் ஒளிபரப்பான 'என்றென்றும் புன்னகை' சீரியலின் மூலம் அறிமுகமான நிதின் கிரிஷ், தற்போது செவ்வந்தி தொடரில் கார்த்திக் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இந்த தொடரில் ஹீரோவாக நடித்து வந்த ராகவ் இறந்து போனது போல் காண்பிக்கப்பட்டதால், நிதின் கிரிஷ் கதாபாத்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் கிடைக்கும் என்று தான் ரசிகர்கள் நம்பினர்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன் நிதின் கிரிஷ் செவ்வந்தி தொடரிலிருந்து விலகுவதாக தனது இண்ஸ்டாகிராமில் தெரிவித்திருந்தார். அவர் வெளியிட்டிருந்த பதிவில், 'கனத்த இதயத்துடன் செவ்வந்தி சீரியலிலிருந்து வெளியேறுகிறேன். என்னிடம் சொல்லியது போல் எனது கதாபாத்திரத்திற்கான முக்கியத்துவத்தை தரவில்லை. நடிகராக என்னுடைய திறமையை வெளிக்காட்டுவதற்கான வாய்ப்புகள் எனக்கு கிடைக்கவில்லை. புரொமோஷன்களுக்கு கூட அழைக்கவில்லை. விரைவில் என்னுடைய இரண்டு புதிய ப்ராஜெக்ட் பற்றி அறிவிக்கிறேன்' என்று பதிவிட்டிருந்தார்.
அந்த பதிவை சில மணி நேரங்களுக்குள் நீக்கிவிட்டு மற்றொரு பதிவில் லீகல் காரணங்களுக்காக பழைய பதிவை நீக்கியதாகவும், புதியதை நோக்கி நகர்ந்து செல்வதற்கான நேரம் விரைவில் இரண்டு புதிய அறிவிப்புகள் வரும் என்றும் செவ்வந்தி சீரியலை விட்டு விலகியதை நிதின் க்ரிஷ் உறுதிபடுத்தியுள்ளார்.