'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
மலையாள திரையுலகில் குணச்சித்திர நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜோஜூ ஜார்ஜ். கடந்த 2018ல் வெளியான ஜோசப் என்கிற படத்தில் கதையின் நாயகனாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்ற இவர், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ஜகமே தந்திரம் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தநிலையில் சமீபத்தில் அவர் இரு வேடங்களில் நடித்திருந்த இரட்ட என்கிற திரைப்படம் மலையாளத்தில் வெளியானது. இதைத்தொடர்ந்து தற்போது ஒரு புதிய தெலுங்கு படம் ஒன்றில் மிகவும் கொடூரமான வில்லனாக நடிப்பதன் மூலம் தெலுங்கு திரையுலகிலும் அடி எடுத்து வைத்துள்ளார் ஜோஜூ ஜார்ஜ்.
வைஷ்ணவ் தேஜ் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஸ்ரீகாந்த் ரெட்டி என்பவர் இயக்குகிறார். இந்த படத்தின் கதையை எழுதும்போது அதில் இந்த வில்லன் கதாபாத்திரத்திற்கு ஜோஜூ ஜார்ஜை மனதில் வைத்து தான் எழுதினாராம் ஸ்ரீகாந்த் ரெட்டி. ஆனால் ஜோஜூ ஜார்ஜுக்கு போன் செய்து இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் என கூறியபோது தெலுங்கில் நடிக்க விருப்பமில்லை என்று கூறிவிட்டாராம் ஜோஜூ ஜார்ஜ்.
“ஆனால் நான் அவரை மனதில் வைத்து இந்த கதாபாத்திரத்தை எழுதியதால் உடனே கிளம்பி கேரளாவில் உள்ள அவரது வீட்டிற்கு நேரிலேயே சென்று விட்டேன். அப்போதும் அதே மனநிலையில் இருந்தவரிடம், இந்த படத்தின் கதையையும் அவரது கதாபாத்திரத்தையும் கூறியதும் அதில் ரொம்பவே ஈர்க்கப்பட்டு உடனே இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு விட்டார். அதுமட்டுமல்ல, இந்த படத்தில் அவரது கதாபாத்திரம் பேசும் தெலங்கானா பாஷையை கூட டப்பிங்கில் தானே பேசுவதாக கூறும் அளவிற்கு அவரை இந்த கதாபாத்திரம் ஈர்த்துவிட்டது. ஒரு முரட்டுத்தனமான இந்த கதாபாத்திரம் படத்தின் ஹீரோ வைஷ்ணவ் தேஜ் மோதும் காட்சிகள் திரையில் பார்க்கும்போது நிச்சயம் ரசிகர்களை கவரும்” என்று கூறியுள்ளார் இயக்குனர் ஸ்ரீகாந்த் ரெட்டி.