சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

துணிவு படத்தை அடுத்து அஜித் நடிக்கும் 62 ஆவது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்த நிலையில் கதையில் ஏற்பட்ட பிரச்சனையால் அவருக்கு பதிலாக மகிழ்திருமேனி அப்படத்தை இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனபோதிலும் அது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை இதுவரை லைகா நிறுவனம் வெளியிடவில்லை.
விரைவில் அஜித் 62வது படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், சமீபத்தில் அஜித்தின் தந்தை மரணம் அடைந்ததால் இப்படத்தின் அறிவிப்பை மார்ச் மாதத்தில் இருந்து ஏப்ரல் மாதத்திற்கு லைகா நிறுவனம் தள்ளி வைத்திருக்கிறார்கள். அடுத்த மாதத்தில் அறிவிப்பை வெளியிட்டுவிட்டு மே மாதத்தில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டிருப்பதாகவும் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
குறிப்பாக மே ஒன்றாம் தேதி அஜித்தின் பிறந்தநாள் என்பதால் அன்றிலிருந்து அவரது 62வது படத்தின் படப்பிடிப்பை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதோடு இப்படத்தை இந்த ஆண்டு வெளியிட வேண்டும் என்று திட்டமிட்டிருந்த லைகா நிறுவனம் தற்போது படப்பிடிப்பு தாமதமாகி வருவதால் அடுத்த ஆண்டில் அஜித் 62 வது படத்தை வெளியிடலாம் என்ற முடிவில் உள்ளனர்.




