மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை |
துணிவு படத்தை அடுத்து அஜித் நடிக்கும் 62 ஆவது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்த நிலையில் கதையில் ஏற்பட்ட பிரச்சனையால் அவருக்கு பதிலாக மகிழ்திருமேனி அப்படத்தை இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனபோதிலும் அது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை இதுவரை லைகா நிறுவனம் வெளியிடவில்லை.
விரைவில் அஜித் 62வது படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், சமீபத்தில் அஜித்தின் தந்தை மரணம் அடைந்ததால் இப்படத்தின் அறிவிப்பை மார்ச் மாதத்தில் இருந்து ஏப்ரல் மாதத்திற்கு லைகா நிறுவனம் தள்ளி வைத்திருக்கிறார்கள். அடுத்த மாதத்தில் அறிவிப்பை வெளியிட்டுவிட்டு மே மாதத்தில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டிருப்பதாகவும் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
குறிப்பாக மே ஒன்றாம் தேதி அஜித்தின் பிறந்தநாள் என்பதால் அன்றிலிருந்து அவரது 62வது படத்தின் படப்பிடிப்பை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதோடு இப்படத்தை இந்த ஆண்டு வெளியிட வேண்டும் என்று திட்டமிட்டிருந்த லைகா நிறுவனம் தற்போது படப்பிடிப்பு தாமதமாகி வருவதால் அடுத்த ஆண்டில் அஜித் 62 வது படத்தை வெளியிடலாம் என்ற முடிவில் உள்ளனர்.