பராசக்தி முதல் பாடலான 'அடி அலையே' வெளியீடு | தயாரிப்பாளர்களுக்கு கூட பாடல் உரிமையை வழங்கியது இல்லை: இளையராஜா | 'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு : நவ., 8ல் முதல் பாடல் | சத்ய சாய் பாபாவின் மகிமையை சொல்லும் ‛அனந்தா' : நவ., 23ல் வெளியீடு | கிஸ் முதல் நெட்வொர்க் வரை... இந்த வாரா ஓடிடி ரிலீஸ்...! | ''பீரியட் படம் பண்ணுவது தனி அனுபவம்... டைம் மிஷின் மூலம் அந்த காலம் செல்வது மாதிரி'': துல்கர் சல்மான் | ரோஜா 'கம்பேக்': 'லெனின் பாண்டியன்' படத்தில் நடிக்கிறார் | மணிரத்னம் படம் : சிம்புவிற்கு பதில் விஜய் சேதுபதி | ரஜினிகாந்த்தை 'தலைவர்' எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன் | ஹரிஷ் கல்யாண் அடுத்து நடிக்கும் இரண்டு படங்கள் |

'துணிவு' படத்திற்குப் பிறகு அஜித் நடிக்க உள்ள அவரது 62வது படத்தை இயக்கப் போவது மகிழ் திருமேனி என எப்போதோ செய்திகள் வெளிவந்துவிட்டது. முதலில் அப்படத்தை இயக்குவதாக இருந்த விக்னேஷ் சிவன் கூட அவரது சமூக வலைதளங்களில் 'அஜித் 62' என்ற எழுத்துக்களை நீக்கிவிட்டார். சமீபத்திய பேட்டி ஒன்றில் கூட தனக்கும், அஜித்திற்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. தான் எழுதிய கதையின் இரண்டாவது பகுதி தயாரிப்பாளருக்குப் பிடிக்கவில்லை, மகிழ் திருமேனி படத்தை இயக்குவது மகிழ்ச்சிதான் என்று தெரிவித்துள்ளார்.
ஆனாலும், அஜித் 62வது படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. சமீபத்தில் அஜித்தின் அப்பா மறைவு காரணமாகக் கூட அறிவிப்பு தள்ளிப் போயிருக்கலாம். ஏப்ரல் மாதம் ஆரம்பமாகும், மே மாதம் ஆரம்பமாகும் என்றுதான் படத்தைப் பற்றித் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
அதே சமயம் படத்தின் திரைக்கதையை மகிழ் திருமேனி இன்னும் முழுவதுமாக எழுதி முடிக்கவில்லை என்று கூட சொல்கிறார்கள். கடந்த இரண்டு மாதங்களாக அவருக்கு ரூம் போட்டுக் கொடுத்தும் தாமதப்படுத்துகிறார் என்கிறார்கள். அவர் தரப்பில் ஓகே என்று சொன்ன பிறகு, படத்தின் திரைக்கதை சம்பந்தப்பட்டவர்களுக்கும் திருப்தி என்றால்தான் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்றும் ஒரு தகவல் கோலிவுட்டில் சுற்றிக் கொண்டிருக்கிறது.