300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
'துணிவு' படத்திற்குப் பிறகு அஜித் நடிக்க உள்ள அவரது 62வது படத்தை இயக்கப் போவது மகிழ் திருமேனி என எப்போதோ செய்திகள் வெளிவந்துவிட்டது. முதலில் அப்படத்தை இயக்குவதாக இருந்த விக்னேஷ் சிவன் கூட அவரது சமூக வலைதளங்களில் 'அஜித் 62' என்ற எழுத்துக்களை நீக்கிவிட்டார். சமீபத்திய பேட்டி ஒன்றில் கூட தனக்கும், அஜித்திற்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. தான் எழுதிய கதையின் இரண்டாவது பகுதி தயாரிப்பாளருக்குப் பிடிக்கவில்லை, மகிழ் திருமேனி படத்தை இயக்குவது மகிழ்ச்சிதான் என்று தெரிவித்துள்ளார்.
ஆனாலும், அஜித் 62வது படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. சமீபத்தில் அஜித்தின் அப்பா மறைவு காரணமாகக் கூட அறிவிப்பு தள்ளிப் போயிருக்கலாம். ஏப்ரல் மாதம் ஆரம்பமாகும், மே மாதம் ஆரம்பமாகும் என்றுதான் படத்தைப் பற்றித் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
அதே சமயம் படத்தின் திரைக்கதையை மகிழ் திருமேனி இன்னும் முழுவதுமாக எழுதி முடிக்கவில்லை என்று கூட சொல்கிறார்கள். கடந்த இரண்டு மாதங்களாக அவருக்கு ரூம் போட்டுக் கொடுத்தும் தாமதப்படுத்துகிறார் என்கிறார்கள். அவர் தரப்பில் ஓகே என்று சொன்ன பிறகு, படத்தின் திரைக்கதை சம்பந்தப்பட்டவர்களுக்கும் திருப்தி என்றால்தான் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்றும் ஒரு தகவல் கோலிவுட்டில் சுற்றிக் கொண்டிருக்கிறது.