'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி | மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா |
தெலுங்கில் சாகுந்தலம் படத்தை அடுத்து தற்போது விஜய தேவரகொண்டாவுடன் இணைந்து குஷி என்ற படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் சமந்தா. மேலும், யசோதா என்ற படத்தின் டப்பிங் பணியில் இருந்தபோது தனக்கு மயோசிட்டிஸ் என்ற நோய் பாதிப்பு இருப்பதாக அவர் தெரிவித்து இருந்தார். அதன் காரணமாகவே சில மாதங்கள் படங்களில் நடிக்காமல் சிகிச்சை பெற்று வந்தார் சமந்தா. இந்நிலையில் தற்போது தான் ஜிம்மில் தீவிரமாக ஒர்க்அவுட் செய்யும் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார்.
அவர் அளித்துள்ள பேட்டியில், மயோசிட்டிஸ் பிரச்னை குறித்து ஒரு தகவல் தெரிவித்து இருக்கிறார். இன்னமும் மயோசிட்டிஸ் நோயிலிருந்து முழுமையாக தான் விடுபடவில்லை என்று தெரிவித்திருக்கும் சமந்தா, முன்பை விட எனது உடல் நிலையில் தற்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதனால் கூடிய சீக்கிரமே இந்த நோயின் பிடியிலிருந்து நான் முழுமையாக விடுபட்டு விடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது என்று அவர் தெரிவித்து இருக்கிறார்.