'மெய்யழகன்' ஆன கார்த்திக் | ஒரு கோடி கேட்டு கார்த்திக் குமார் மானநஷ்ட வழக்கு : சுசித்ராவிற்கு கோர்ட் விதித்த தடை | கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்திய திரைப்பட கல்லூரி மாணவர்கள் சாதனை | நடிகை லைலா கான் கொலை வழக்கு : வளர்ப்பு தந்தைக்கு துாக்கு | 11வது நினைவு நாள் : எம்.ஜி.ஆர், சிவாஜிக்கு தனி தனி குரலில் பாடாத டி.எம்.சவுந்தர்ராஜன் | தக் லைப்பில் அதிரடி நடனத்திற்கு தயாராகும் த்ரிஷா | குணா பாடலுக்கு முறைப்படி அனுமதி பெற்றுள்ளோம் : மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர் விளக்கம் | நான் சிங்கிள், மிங்கிளாக விரும்பவில்லை : ஸ்ருதிஹாசன் | பாராசூட்டில் பறந்த கோட் பட நாயகி மீனாட்சி சவுத்ரி! | அபுதாபியில் பிரதமர் மோடி திறந்து வைத்த கோயிலுக்கு சென்ற ரஜினி |
தெலுங்கில் சாகுந்தலம் படத்தை அடுத்து தற்போது விஜய தேவரகொண்டாவுடன் இணைந்து குஷி என்ற படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் சமந்தா. மேலும், யசோதா என்ற படத்தின் டப்பிங் பணியில் இருந்தபோது தனக்கு மயோசிட்டிஸ் என்ற நோய் பாதிப்பு இருப்பதாக அவர் தெரிவித்து இருந்தார். அதன் காரணமாகவே சில மாதங்கள் படங்களில் நடிக்காமல் சிகிச்சை பெற்று வந்தார் சமந்தா. இந்நிலையில் தற்போது தான் ஜிம்மில் தீவிரமாக ஒர்க்அவுட் செய்யும் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார்.
அவர் அளித்துள்ள பேட்டியில், மயோசிட்டிஸ் பிரச்னை குறித்து ஒரு தகவல் தெரிவித்து இருக்கிறார். இன்னமும் மயோசிட்டிஸ் நோயிலிருந்து முழுமையாக தான் விடுபடவில்லை என்று தெரிவித்திருக்கும் சமந்தா, முன்பை விட எனது உடல் நிலையில் தற்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதனால் கூடிய சீக்கிரமே இந்த நோயின் பிடியிலிருந்து நான் முழுமையாக விடுபட்டு விடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது என்று அவர் தெரிவித்து இருக்கிறார்.