பணம் சம்பாதிக்க எத்தனையோ தொழில் இருக்குது.. அதுக்கு, ஆபாச படம் எடுக்கலாம்: பொங்கிய பேரரசு | இயக்குனர் ரஞ்சித் மீதான மற்றொரு பாலியல் வழக்கும் தள்ளுபடி | திலீப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'பைசன்' வரவேற்பு: அனுபமா பரமேஸ்வரன் நீண்ட நன்றிப் பதிவு | திரைப்படத் தொழிலாளர்களுக்கும் பங்கு: தெலுங்கானா முதல்வர் அறிவிப்பு | காந்தாரா சாப்டர் 1 : ஆன்லைன் இணையதளத்தில் 14 மில்லியன் டிக்கெட்டுகள் விற்பனை | மீண்டும் மகன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் மோகன்லால் ? | கேஜிஎப் ஒளிப்பதிவாளர் திருமணத்தில் கலந்து கொண்ட ஸ்ரீ லீலா | டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் |

சினிமா நடிகையான லாவண்யா தேவி 90-களில் மிகவும் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகையாக வலம் வந்தார். 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், தமிழில் முன்னணி ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜித் என அனைவருடனும் படங்களில் நடித்துள்ளார். தற்போது சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்து அருவி தொடரில் லெஷ்மி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருக்கு 44 வயதாகிறது. இப்போதும் இளமை மாறாமல் இருக்கும் லாவண்யா தேவி திருமணமாகி இரண்டு குழந்தைக்கு தாயாக இருப்பார் என்றே ரசிகர்கள் கருதி வந்தனர்.
இந்நிலையில், அண்மையில் அவருக்கு பிரசன்னா என்பவருடன் திருமணம் முடிந்துள்ள தகவல் சோஷியல் மீடியாவில் பரவ பலரும் ஆச்சரியமடைந்துள்ளனர். லாவண்யா தேவிக்கும் பிரசன்னா என்பவருக்கும் திருப்பதியில் இரண்டு தினங்களுக்கு முன் திருமணம் முடிந்துள்ளது. இதில், அருவி தொடரில் நடித்துவரும் நடிகர்கள் கலந்து கொண்டுள்ளனர். லாவண்யாவின் திருமணத்தின் போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சக நடிகரான ஈஸ்வர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதனையடுத்து பலரும் லாவண்யா தேவிக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.