அனில் ரவிபுடி படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ் | பிளாஷ்பேக் : காணாமல் போன நல்லவள் | பிளாஷ்பேக் : கேரக்டருக்காக செத்துப்போன கருப்பு சுப்பையா | டைம் கொடுங்க.... விஜய் ஆட்சி நடத்த அனுமதிக்க வேண்டும் : சேரன் | ஸ்டாலினை சந்தித்ததில் அரசியல் இல்லை: ரஜினி தரப்பு விளக்கம் | விஜய்க்கு ஆதரவு தெரிவித்ததால் சீரியல் வாய்ப்பு போச்சு : அருண் ராஜன் | தனுஷை அணுகும் ஹிந்தி பட இயக்குனர் | இயக்குனராகும் ராம் பொத்தினேனி | சினிமாவில் திருப்புமுனை தந்தவர்களை சந்திப்பாரா முதல்வர் விஜய்? | விதியை மீறி காட்டின் நடுவே இறங்கினாரா ரகுல் ப்ரீத் சிங் ? வனத்துறை விளக்கம் |

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடரில் ஹீரோவாக கலக்கி வந்தவர் சதீஷ். சமீபத்திய எபிசோடுகளில் அவரது கேரக்டரை குறைத்து காமெடியனாகவே மாற்றிவிட்டனர். போதாக்குறைக்கு ரஞ்சித் வேறு ஹீரோவாக என்ட்ரி கொடுத்து பாக்கியலட்சுமியிடம் ரொமான்ஸ் செய்து வருகிறார். ரஞ்சித்தின் என்ட்ரி குறித்து முன்னரே பதிவிட்டிருந்த சதீஷ், இனி பாக்கியலெட்சுமி தொடரில் தனது கேரக்டர் குறைக்கப்படும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், அதற்கேற்றார் போல் தற்போது பெட்டிக்கடையில் நின்று டீ ஆத்துவது போல் புகைப்படத்தை வெளியிட்டு 'கூடிய சீக்கிரமே ஈஸ்வரி புட் கேண்டீனில் டீ மாஸ்டரா சேர போறேன்' என்று பதிவிட்டுள்ளார். சதீஷின் இந்த நிலைமையை பார்த்து ரசிகர்கள் சிலர் 'கடைசியில ஆள் இல்லாத கடையில டீ ஆத்துற நிலைமைக்கு வந்துட்டீங்களே கோபி!' என கிண்டலடித்து வருகின்றனர்.




