மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு |
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடரில் ஹீரோவாக கலக்கி வந்தவர் சதீஷ். சமீபத்திய எபிசோடுகளில் அவரது கேரக்டரை குறைத்து காமெடியனாகவே மாற்றிவிட்டனர். போதாக்குறைக்கு ரஞ்சித் வேறு ஹீரோவாக என்ட்ரி கொடுத்து பாக்கியலட்சுமியிடம் ரொமான்ஸ் செய்து வருகிறார். ரஞ்சித்தின் என்ட்ரி குறித்து முன்னரே பதிவிட்டிருந்த சதீஷ், இனி பாக்கியலெட்சுமி தொடரில் தனது கேரக்டர் குறைக்கப்படும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், அதற்கேற்றார் போல் தற்போது பெட்டிக்கடையில் நின்று டீ ஆத்துவது போல் புகைப்படத்தை வெளியிட்டு 'கூடிய சீக்கிரமே ஈஸ்வரி புட் கேண்டீனில் டீ மாஸ்டரா சேர போறேன்' என்று பதிவிட்டுள்ளார். சதீஷின் இந்த நிலைமையை பார்த்து ரசிகர்கள் சிலர் 'கடைசியில ஆள் இல்லாத கடையில டீ ஆத்துற நிலைமைக்கு வந்துட்டீங்களே கோபி!' என கிண்டலடித்து வருகின்றனர்.