முன்னாள் மனைவியிடம் மன்னிப்பு கேட்ட ஏஆர் ரஹ்மான் | நான் நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண் : பாடகி கெனிஷா பதிவு | வதந்தி 2 வெப்சீரிஸின் படப்பிடிப்பு எப்போது? | ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் |
சினிமா நடிகையான லாவண்யா தேவி 90-களில் மிகவும் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகையாக வலம் வந்தார். 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், தமிழில் முன்னணி ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜித் என அனைவருடனும் படங்களில் நடித்துள்ளார். தற்போது சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்து அருவி தொடரில் லெஷ்மி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருக்கு 44 வயதாகிறது. இப்போதும் இளமை மாறாமல் இருக்கும் லாவண்யா தேவி திருமணமாகி இரண்டு குழந்தைக்கு தாயாக இருப்பார் என்றே ரசிகர்கள் கருதி வந்தனர்.
இந்நிலையில், அண்மையில் அவருக்கு பிரசன்னா என்பவருடன் திருமணம் முடிந்துள்ள தகவல் சோஷியல் மீடியாவில் பரவ பலரும் ஆச்சரியமடைந்துள்ளனர். லாவண்யா தேவிக்கும் பிரசன்னா என்பவருக்கும் திருப்பதியில் இரண்டு தினங்களுக்கு முன் திருமணம் முடிந்துள்ளது. இதில், அருவி தொடரில் நடித்துவரும் நடிகர்கள் கலந்து கொண்டுள்ளனர். லாவண்யாவின் திருமணத்தின் போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சக நடிகரான ஈஸ்வர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதனையடுத்து பலரும் லாவண்யா தேவிக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.