ஓடிடி-க்கு தயாரான நானியின் 'கோர்ட்' | இந்திய பொழுதுபோக்கு துறையின் மதிப்பு 100 பில்லியன் டாலராக உயரும் : பிக்கி தலைவர் கமல் நம்பிக்கை | 2025 தமிழ் சினிமா - காலாண்டு ரிப்போர்ட் | பிளாஷ்பேக் : டி.ராஜேந்தரை ஹீரோவாக்கிய ரஜினி | பிளாஷ்பேக் : ஆதித்தியன் கனவை நனவாக்கிய பாடல் | ஜி.வி.பிரகாசுக்கு கை கொடுக்குமா 'பிளாக்மெயில்'? | 'எம்புரான்' படத்தை எதிர்த்து தமிழ்நாட்டு விவசாயிகள் போராட்டம் | குட் பேட் அக்லி ஓடிடி வெளியாகும் தேதி | வெளிவரும் முன்பே வெற்றிக்கு வழிவகுத்த "கேங்கர்ஸ்" | திரைப்பட விழாவில் 'சந்தோஷ்': மத்திய அரசு அனுமதிக்குமா? |
சினிமா நடிகையான லாவண்யா தேவி 90-களில் மிகவும் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகையாக வலம் வந்தார். 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், தமிழில் முன்னணி ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜித் என அனைவருடனும் படங்களில் நடித்துள்ளார். தற்போது சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்து அருவி தொடரில் லெஷ்மி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருக்கு 44 வயதாகிறது. இப்போதும் இளமை மாறாமல் இருக்கும் லாவண்யா தேவி திருமணமாகி இரண்டு குழந்தைக்கு தாயாக இருப்பார் என்றே ரசிகர்கள் கருதி வந்தனர்.
இந்நிலையில், அண்மையில் அவருக்கு பிரசன்னா என்பவருடன் திருமணம் முடிந்துள்ள தகவல் சோஷியல் மீடியாவில் பரவ பலரும் ஆச்சரியமடைந்துள்ளனர். லாவண்யா தேவிக்கும் பிரசன்னா என்பவருக்கும் திருப்பதியில் இரண்டு தினங்களுக்கு முன் திருமணம் முடிந்துள்ளது. இதில், அருவி தொடரில் நடித்துவரும் நடிகர்கள் கலந்து கொண்டுள்ளனர். லாவண்யாவின் திருமணத்தின் போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சக நடிகரான ஈஸ்வர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதனையடுத்து பலரும் லாவண்யா தேவிக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.