போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா கடந்த வாரம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. 'ஆர்ஆர்ஆர்' படத்தில் இடம் பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த ஒரிஜனல் பாடலுக்கான விருதையும், 'த எலிபென்ட் விஸ்பரர்ஸ்' என்ற தமிழ் டாகுமென்டரி படம், சிறந்த டாகுமென்டரி குறும்படத்திற்கான விருதையும் பெற்றது.
ஆஸ்கர் விருது விழா நடைபெற்ற டால்பி அரங்கில் விழா நடந்த போது 'ஆர்ஆர்ஆர்' படத்தின் இயக்குனர் ராஜமவுலியின் குடும்பத்தினர் கடைசி வரிசையில் வெளியே செல்லும் கதவருகில் அமர்ந்திருந்தனர். அது குறித்து சர்ச்சையைக் கிளப்பியிருந்தனர் தெலுங்கு சினிமா ரசிகர்கள். இப்போதுதான் அது குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது.
விழாவில் 'நாட்டு நாட்டு' பாடலுக்காக விருது வாங்கிய கீரவாணி அவரது மனைவி, பாடலாசிரியர் சந்திரபோஸ் அவரது மனைவி ஆகியோருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டதாம். ராஜமவுலி அவரது மனைவி, அவரது மகன், மருமகள், ஜுனியர் என்டிஆர் அவரது மனைவி, ராம் சரண் அவரது மனைவி ஆகிய அனைவரும் விழாவில் கலந்து கொள்ள 25 ஆயிரம் யுஎஸ் டாலர் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கித்தான் விழாவில் கலந்து கொண்டார்களாம். 25 ஆயிரம் யுஎஸ் டாலர் என்பது இந்திய ரூபாய் மதிப்பில் 20 லட்ச ரூபாய். டிக்கெட்டுக்காக மட்டுமே 'ஆர்ஆர்ஆர்' குழுவினர் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் செலவு செய்திருக்கிறார்கள்.