'திரெளபதி 2' படத்தில் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட சின்மயி | மஞ்சு வாரியரிடம் கமல் வைத்த கோரிக்கை | நகைச்சுவைக்கு நேரமும் இயல்பான வெளிப்பாடும் அவசியம் : ஷ்ரேயா ஷர்மா | ராம்சரண் படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் பாலிவுட் ஹீரோவின் தந்தை | என் மகனை திரையுலகிலிருந்து ஒதுக்க சதி ; பிரித்விராஜின் தாயார் பகீர் குற்றச்சாட்டு | 500 நடன கலைஞர்களுடன் நடைபெற்று வரும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் பாடல் படப்பிடிப்பு | பாட்டிலை தலையில் உடைத்து போஸ்டருக்கு ரத்த திலகம் இட்ட மகேஷ்பாபு ரசிகர் | ரியோ ராஜ் நடிக்கும் 'ராம் இன் லீலா' | இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா | நடிகை கனகா தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார் |

95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா கடந்த வாரம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. 'ஆர்ஆர்ஆர்' படத்தில் இடம் பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த ஒரிஜனல் பாடலுக்கான விருதையும், 'த எலிபென்ட் விஸ்பரர்ஸ்' என்ற தமிழ் டாகுமென்டரி படம், சிறந்த டாகுமென்டரி குறும்படத்திற்கான விருதையும் பெற்றது.
ஆஸ்கர் விருது விழா நடைபெற்ற டால்பி அரங்கில் விழா நடந்த போது 'ஆர்ஆர்ஆர்' படத்தின் இயக்குனர் ராஜமவுலியின் குடும்பத்தினர் கடைசி வரிசையில் வெளியே செல்லும் கதவருகில் அமர்ந்திருந்தனர். அது குறித்து சர்ச்சையைக் கிளப்பியிருந்தனர் தெலுங்கு சினிமா ரசிகர்கள். இப்போதுதான் அது குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது.
விழாவில் 'நாட்டு நாட்டு' பாடலுக்காக விருது வாங்கிய கீரவாணி அவரது மனைவி, பாடலாசிரியர் சந்திரபோஸ் அவரது மனைவி ஆகியோருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டதாம். ராஜமவுலி அவரது மனைவி, அவரது மகன், மருமகள், ஜுனியர் என்டிஆர் அவரது மனைவி, ராம் சரண் அவரது மனைவி ஆகிய அனைவரும் விழாவில் கலந்து கொள்ள 25 ஆயிரம் யுஎஸ் டாலர் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கித்தான் விழாவில் கலந்து கொண்டார்களாம். 25 ஆயிரம் யுஎஸ் டாலர் என்பது இந்திய ரூபாய் மதிப்பில் 20 லட்ச ரூபாய். டிக்கெட்டுக்காக மட்டுமே 'ஆர்ஆர்ஆர்' குழுவினர் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் செலவு செய்திருக்கிறார்கள்.




