லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி நடிக்கும் ‛டிசி' | உறவுகள் பொய் சொன்னால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது : தமன்னா | 15 வருடத்திற்கு பிறகு மலையாள படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் மோகினி | மம்முட்டிக்காக கண்ணூர் கோவிலில் பொன்குடம் நேர்த்திக்கடன் செலுத்திய ரசிகர் | ரெட் லேபிள் படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட நடிகை சிம்ரன் | இப்ப ஹீரோ, அடுத்து இயக்கம் : புதுமாப்பிள்ளை அபிஷன் ஜீவிந்த் பேட்டி | இந்தப்போக்கு மோசமானது : நிவேதா பெத்துராஜ் | தன் இறப்புக்கு லீவு வாங்கிக் கொடுத்த அப்பா : மேடையில் கண் கலங்கிய ஆனந்தராஜ் | அல்லு அர்ஜுன் தம்பி அல்லு சிரிஷ் நிச்சயதார்த்தம் | இயக்குனர் வி.சேகர் மருத்துவமனையில் அட்மிட் : மகன் உருக்கமான வேண்டுகோள் |

95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா கடந்த வாரம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. 'ஆர்ஆர்ஆர்' படத்தில் இடம் பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த ஒரிஜனல் பாடலுக்கான விருதையும், 'த எலிபென்ட் விஸ்பரர்ஸ்' என்ற தமிழ் டாகுமென்டரி படம், சிறந்த டாகுமென்டரி குறும்படத்திற்கான விருதையும் பெற்றது.
ஆஸ்கர் விருது விழா நடைபெற்ற டால்பி அரங்கில் விழா நடந்த போது 'ஆர்ஆர்ஆர்' படத்தின் இயக்குனர் ராஜமவுலியின் குடும்பத்தினர் கடைசி வரிசையில் வெளியே செல்லும் கதவருகில் அமர்ந்திருந்தனர். அது குறித்து சர்ச்சையைக் கிளப்பியிருந்தனர் தெலுங்கு சினிமா ரசிகர்கள். இப்போதுதான் அது குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது.
விழாவில் 'நாட்டு நாட்டு' பாடலுக்காக விருது வாங்கிய கீரவாணி அவரது மனைவி, பாடலாசிரியர் சந்திரபோஸ் அவரது மனைவி ஆகியோருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டதாம். ராஜமவுலி அவரது மனைவி, அவரது மகன், மருமகள், ஜுனியர் என்டிஆர் அவரது மனைவி, ராம் சரண் அவரது மனைவி ஆகிய அனைவரும் விழாவில் கலந்து கொள்ள 25 ஆயிரம் யுஎஸ் டாலர் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கித்தான் விழாவில் கலந்து கொண்டார்களாம். 25 ஆயிரம் யுஎஸ் டாலர் என்பது இந்திய ரூபாய் மதிப்பில் 20 லட்ச ரூபாய். டிக்கெட்டுக்காக மட்டுமே 'ஆர்ஆர்ஆர்' குழுவினர் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் செலவு செய்திருக்கிறார்கள்.