ஆர்ஆர்ஆர் பட காட்சிகளை இயக்க பாலிவுட் இயக்குனரை அழைத்த ராம்சரண் | தம்பியின் அறிமுக படத்திற்கு எதிராக களம் இறங்கிய ராணா | பிரேமம் வாய்ப்பு கைநழுவிப்போய் பஹத் பாசில் படம் மூலம் வெளிச்சத்திற்கு வந்த அஞ்சனா ஜெயபிரகாஷ் | பஸ் விபத்தில் சிக்கிய புஷ்பா 2 படக்குழு | மரகதமணியின் பாராட்டு மழையில் நனைந்த ஜஸ்டின் பிரபாகரன் | சமந்தா வெளியிட்ட தல கீழ் புகைப்படத்துக்கு 9 லட்சத்துக்கு அதிகமான லைக்குகள் | ‛ரெஜினா' பட விழா : மேடையில் பாட்டுபாடி, நடனமாடி அசத்திய சுனைனா | மார்கழி திங்கள் படப்பிடிப்பில் விபத்து: தப்பிய லைட்மேன்! | அனுஷ்கா படத்திற்காக தனுஷ் பாடிய பாடல் வெளியீடு | வயதாவது, கடினமானது… 'லிங்கா' பட நாயகி சோனாக்ஷி சின்ஹா |
சென்னை : ரெட் ஜெயன்ட்டில் இருந்து வெளியேறிவிட்டேன். சினிமா தொடர்பாக இனி யாரும் என்னிடம் பேசாதீர்கள் என நடிகரும், அமைச்சருமான உதயநிதி தெரிவித்துள்ளார்.
மு.மாறன் இயக்கத்தில் உதயநிதி நடித்துள்ள படம் 'கண்ணை நம்பாதே'. நாயகியாக ஆத்மிகா நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் பிரசன்னா, ஸ்ரீகாந்த், வசுந்தரா, பூமிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மார்ச் 17ல் படம் ரிலீஸாகிறது.
இப்படம் தொடர்பாக உதயநிதி கூறுகையில், ‛‛கிரைம் கலந்த திரில்லர் படத்தில் நடிக்க ஆசை. அப்படி அமைந்த படம் தான் இது. நான்கு ஆண்டுகளுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட படம். கொரோனாவால் தாமதமாகிவிட்டது. பெரும்பாலும் படம் இரவில் தான் நடக்கிறது. இளைஞரணி செயலாளர், எம்எல்ஏ பிறகு தான் அமைச்சரானேன். நான் ஒரே பாடலில் உயரவில்லை. நான்கரை ஆண்டுகள் உழைத்து தான் அமைச்சரானேன். ரெட் ஜெயன்ட் நிறுவனத்தில் இருந்து வெளியே வந்துவிட்டேன். தற்போது அதனை அர்ஜுன் துரை மற்றும் செண்பகமூர்த்தி ஆகியோர் தான் பார்த்துக் கொள்கிறார்கள். இனி சினிமா தொடர்பாக என்னை யாரும் தொடர்பு கொள்ளாதீர்கள்.
இவ்வாறு உதயநிதி தெரிவித்தார்.