முன்னாள் மனைவியிடம் மன்னிப்பு கேட்ட ஏஆர் ரஹ்மான் | நான் நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண் : பாடகி கெனிஷா பதிவு | வதந்தி 2 வெப்சீரிஸின் படப்பிடிப்பு எப்போது? | ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் |
கர்ணன் படத்தை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின், பஹத் பாசில், வடிவேலு என ஒரு கமர்சியல் கூட்டணியை வைத்து மாமன்னன் என்கிற படத்தை இயக்கினார் இயக்குனர் மாரி செல்வராஜ். அந்த படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடந்து கொண்டிருக்கும்போதே சிறிய பட்ஜெட் படமாக வாழை என்கிற படத்தையும் இயக்கி முடித்து விட்டார். இந்த படத்தில் கலையரசன், நிகிலா விமல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கிராமத்து சிறுவர்களை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படமும் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் இருக்கிறது.
இந்த நிலையில் இந்த படத்திற்கு இசையமைத்து வரும் சந்தோஷ் நாராயணன் படத்தை பார்த்து தான் பிரமித்து போனதாக கூறியுள்ளார். சமீபத்தில் மாரி செல்வராஜின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “வாழை படம் பார்த்து அப்படியே ஸ்தம்பித்து விட்டேன். ஒரு லைப் டைம் படம் கொடுத்து விட்டோம் என உங்களை தயார் படுத்திக் கொள்ளுங்கள். தொடர்ந்து உங்களது மாயாஜாலங்களால் எங்களை மகிழ்வியுங்கள்” என்று கூறியுள்ளார்.
அதேசமயம் இந்த படம் திரையரங்குகளுக்கு வராமல் நேரடியாகவே ஓடிடி தளத்தில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.