தெலுங்கில் மகேஷ்பாபுவின் உறவினருக்கு ஜோடியாக அறிமுகமாகும் ரவீனா டாண்டன் மகள் | 15 நாட்கள் கிடையாது.. 5 நாட்கள் தான் ; வா வாத்தியார் தயாரிப்பாளர் கெடுபிடி | நான் இப்போ சிங்கிள் : மூன்றாவது கணவரை பிரிந்த பிறகு நடிகை மீரா வாசுதேவன் அறிவிப்பு | கவுரவ ஆஸ்கர் விருது பெற்ற டாம் குரூஸ் | இரண்டு பாகங்களாக உருவாகும் பிரபாஸின் பவுஸி | வாரணாசி பட வில்லன் பிருத்விராஜ் ஹாலிவுட் பட பாதிப்பா? | விஜய்சேதுபதியா... துருவ் விக்ரமா... மணிரத்னம் சாய்ஸ் யார்? | விஷால் இயக்கி நடிக்கும் 'மகுடம்' படப்பிடிப்பு நிறைவு | ரஜினி படத்தை தனுஷ் இயக்குவாரா? | ப்ரண்ட்ஸ் ரீ ரிலீஸ் விழா : படக்குழு ஆப்சென்ட் |

கர்ணன் படத்தை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின், பஹத் பாசில், வடிவேலு என ஒரு கமர்சியல் கூட்டணியை வைத்து மாமன்னன் என்கிற படத்தை இயக்கினார் இயக்குனர் மாரி செல்வராஜ். அந்த படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடந்து கொண்டிருக்கும்போதே சிறிய பட்ஜெட் படமாக வாழை என்கிற படத்தையும் இயக்கி முடித்து விட்டார். இந்த படத்தில் கலையரசன், நிகிலா விமல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கிராமத்து சிறுவர்களை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படமும் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் இருக்கிறது.
இந்த நிலையில் இந்த படத்திற்கு இசையமைத்து வரும் சந்தோஷ் நாராயணன் படத்தை பார்த்து தான் பிரமித்து போனதாக கூறியுள்ளார். சமீபத்தில் மாரி செல்வராஜின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “வாழை படம் பார்த்து அப்படியே ஸ்தம்பித்து விட்டேன். ஒரு லைப் டைம் படம் கொடுத்து விட்டோம் என உங்களை தயார் படுத்திக் கொள்ளுங்கள். தொடர்ந்து உங்களது மாயாஜாலங்களால் எங்களை மகிழ்வியுங்கள்” என்று கூறியுள்ளார்.
அதேசமயம் இந்த படம் திரையரங்குகளுக்கு வராமல் நேரடியாகவே ஓடிடி தளத்தில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.