'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் | நள்ளிரவு பூஜை நடத்திய பூ நடிகை | துக்கடா வேடங்களை ஒதுக்கும் புயல் காமெடியன் | எண்பதுகளின் கதாநாயகியை நினைவூட்டும் அனுபமா; நடிகை கோமலி பிரசாத் பாராட்டு | 'லோகா 2' மற்றும் 'பிரேமலு 2'வில் நான் இருக்கிறேனா ? மமிதா பைஜூ பதில் | வயலில் நாற்று நட நெல்லை மக்கள் தந்த பயிற்சி: அனுபமா பரமேஸ்வரனின் 'பைசன்' அனுபவம் | உழைக்கும் கரங்கள், எஜமான், கண்ணப்பா - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வெள்ளிவிழா ஆண்டின் நிறைவில் விண்வெளி நாயகன் கமல்ஹாசனின் “தெனாலி” | நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு |
கர்ணன் படத்தை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின், பஹத் பாசில், வடிவேலு என ஒரு கமர்சியல் கூட்டணியை வைத்து மாமன்னன் என்கிற படத்தை இயக்கினார் இயக்குனர் மாரி செல்வராஜ். அந்த படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடந்து கொண்டிருக்கும்போதே சிறிய பட்ஜெட் படமாக வாழை என்கிற படத்தையும் இயக்கி முடித்து விட்டார். இந்த படத்தில் கலையரசன், நிகிலா விமல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கிராமத்து சிறுவர்களை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படமும் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் இருக்கிறது.
இந்த நிலையில் இந்த படத்திற்கு இசையமைத்து வரும் சந்தோஷ் நாராயணன் படத்தை பார்த்து தான் பிரமித்து போனதாக கூறியுள்ளார். சமீபத்தில் மாரி செல்வராஜின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “வாழை படம் பார்த்து அப்படியே ஸ்தம்பித்து விட்டேன். ஒரு லைப் டைம் படம் கொடுத்து விட்டோம் என உங்களை தயார் படுத்திக் கொள்ளுங்கள். தொடர்ந்து உங்களது மாயாஜாலங்களால் எங்களை மகிழ்வியுங்கள்” என்று கூறியுள்ளார்.
அதேசமயம் இந்த படம் திரையரங்குகளுக்கு வராமல் நேரடியாகவே ஓடிடி தளத்தில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.