இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
'சுந்தரி' சீரியல் மூலம் பிரபலமானவர் கேப்ரில்லா. இதேபோல் 'பாரதி கண்ணம்மா' சீரியல் மூலம் பிரபலமானவர் வினுஷா. இருவருமே சமூக வலைத்தளத்தின் மூலம் புகழ்பெற்று சின்னத்திரைக்கு வந்தவர்கள். உலகம் கேலி செய்த தங்கள் நிறத்தையே மூலதனமாக்கி ஜெயித்தவர்கள். இதில் கேப்ரில்லா நயன்தாரா நடித்த 'ஐரா' படத்தில் இளம் வயது நயன்தாராவாக நடித்து சினிமாவில் அறிமுகமானார். மேலும் சில படங்களில் நடித்துள்ளார். வினுஷாவும் சில படங்களில் நடித்துள்ளார். தற்போது இருவருமே என் 4 என்ற படத்தில் நாயகிகளாக நடித்துள்ளனர்.
இவர்களுடன் அனுபமா குமார், அக்ஷய் கமல், மைக்கேல் தங்கராஜ், அப்சல் ஹமீது, வடிவுக்கரசி மற்றும் பலர் நடித்துள்ளனர். லோகேஷ் குமார் இயக்கியுள்ளார். வரும் மார்ச் 17ம் தேதி படம் திரைக்கு வரவிருக்கிறது.
கேப்ரில்லா கூறும்போது “நான் மீனவ பெண்ணாகவும், வினுஷா மாற்றுத்திறனாளியாகவும் நடித்துள்ளோம். ஒரு சம்பவத்தில் 3 ஜோடிகள் மற்றும் ஒரு போலீஸ் அதிகாரியை தொடர்புப்படுத்தி நகரும் கதையாக தயாராகி உள்ளது. ஒரு சிறிய தவறு எப்படி சிக்கலை உருவாக்குகிறது என்பது கருவாக இருக்கும்'' என்றார்.