பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா | பிளாஷ்பேக் : சென்டிமெண்டில் அமலாவை கவிழ்த்த டி.ராஜேந்தர் | பிளாஷ்பேக்: 2 ஹீரோயின்கள் மோதிய 'மாங்கல்யம்' | சுற்றுலாவில் கீர்த்தி சுரேஷின் தலை தீபாவளி | காதலருடன் தீபாவளி கொண்டாடிய சமந்தா | ரூ.83 கோடி வசூலித்த ‛டியூட்' : 'ஹாட்ரிக்' 100 கோடியில் பிரதீப் ரங்கநாதன் | கர்நாடகாவில் 200 கோடி வசூல் சாதனையில் 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் |
நடிகர் சூர்யா இப்பொழுது பிஸியாக அவரது 42-வது படத்தில் நடித்து கொண்டு வருகிறார். இதை சிவா இயக்குகிறார். இத்திரைப்படத்தை தொடர்ந்து விரைவில் வெற்றி மாறனின் வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா . இதனிடையே தமிழ் நடிகர்கள் பலர் தெலுங்கு தயாரிப்பாளர் படங்களில் நடிப்பது டிரெண்ட் ஆகியுள்ளது. விஜய் (வாரிசு), தனுஷ் (வாத்தி), சிவகார்த்திகேயன் (பிரின்ஸ்) இவர்களை தொடர்ந்து இந்த வரிசையில் சூர்யாவும் நேரடி தெலுங்கு தயாரிப்பாளர் படத்தில் நடிக்கவுள்ளார்.
தெலுங்கில் இவர் நடிக்க இருக்கும் இப்படத்தை சீதா ராமம் படத்தின் இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கவுள்ளாராம். இந்த படத்தை தெலுங்கு பிரபல தயாரிப்பு நிறுவனம் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறார்கள் என கூறப்படுகிறது . இப்படத்தின் கதையை இயக்குனர் முதலில் நடிகர் ராம் சரண் மற்றும் நடிகர் நானிக்கு கூறியுள்ளார். அவர்கள் வேறுபடங்களில் பிஸியாக இருப்பதால் மறுத்துவிட்டனர். இதனால் அந்த கதையை தற்போது சூர்யாவிடம் சொல்லி ஓகே வாங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.