கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் |
நடிகர் சூர்யா இப்பொழுது பிஸியாக அவரது 42-வது படத்தில் நடித்து கொண்டு வருகிறார். இதை சிவா இயக்குகிறார். இத்திரைப்படத்தை தொடர்ந்து விரைவில் வெற்றி மாறனின் வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா . இதனிடையே தமிழ் நடிகர்கள் பலர் தெலுங்கு தயாரிப்பாளர் படங்களில் நடிப்பது டிரெண்ட் ஆகியுள்ளது. விஜய் (வாரிசு), தனுஷ் (வாத்தி), சிவகார்த்திகேயன் (பிரின்ஸ்) இவர்களை தொடர்ந்து இந்த வரிசையில் சூர்யாவும் நேரடி தெலுங்கு தயாரிப்பாளர் படத்தில் நடிக்கவுள்ளார்.
தெலுங்கில் இவர் நடிக்க இருக்கும் இப்படத்தை சீதா ராமம் படத்தின் இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கவுள்ளாராம். இந்த படத்தை தெலுங்கு பிரபல தயாரிப்பு நிறுவனம் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறார்கள் என கூறப்படுகிறது . இப்படத்தின் கதையை இயக்குனர் முதலில் நடிகர் ராம் சரண் மற்றும் நடிகர் நானிக்கு கூறியுள்ளார். அவர்கள் வேறுபடங்களில் பிஸியாக இருப்பதால் மறுத்துவிட்டனர். இதனால் அந்த கதையை தற்போது சூர்யாவிடம் சொல்லி ஓகே வாங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.