இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
அருண் விஜய் நாயகனாக நடித்த யானை படத்தை அடுத்து விஷாலை வைத்து தனது புதிய படத்தை இயக்குகிறார் ஹரி. ஏற்கனவே ஹரி இயக்கத்தில் தாமிரபரணி, பூஜை படங்களில் நடித்த விஷால் இந்த படத்தின் மூலம் மூன்றாவது முறையாக அவருடன் இணைகிறார். இதற்கு முன்பு விக்ரம் நடித்த சாமி, சாமி 2 மற்றும் சூர்யா நடிப்பில் உருவான சிங்கம் படங்களின் மூன்று பாகங்களையும் போலீஸ் கதையில் இயக்கிய ஹரி, தற்போது விஷாலை வைத்து இயக்கும் புதிய படத்தையும் போலீஸ் கதையிலேயே இயக்கப் போகிறார். இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரிக்கிறது. வருகிற செப்டம்பர் மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.