எனக்கு நீதி வாங்கித் தாங்க : மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி முதல்வரிடம் முறையிட்ட ஜாய் கிரிஸ்டலா | நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி | பராசக்தி படத்தில் ராணா நடிப்பதை உறுதிப்படுத்திய சிவகார்த்திகேயன் | மதராஸி - காந்தி கண்ணாடி படங்களின் மூன்று நாள் வசூல் எவ்வளவு? | அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ் | சிரஞ்சீவியுடன் இளமையான தோற்றத்தில் நடனமாடும் நயன்தாரா | கதையின் நாயகன் ஆனார் முனீஷ்காந்த் | வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம் | பிளாஷ்பேக்: 30 ஆண்டுகளுக்கு முன்பு கலக்கிய கோர்ட் டிராமா | பிளாஷ்பேக் : முதல் நட்சத்திர வில்லன் |
பாலா இயக்கத்தில் நந்தா, பிதாமகன் போன்ற படங்களில் நடித்த சூர்யா அதையடுத்து வணங்கான் படத்தில் கமிட்டாகி முதல் கட்ட படப்பிடிப்பிலும் நடித்து வந்தார். இந்த படத்தில் தெலுங்கு நடிகை கிர்த்தி ஷெட்டி நாயகியாக ஒப்பந்தமாகி இருந்தார். இந்நிலையில் முதல் கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடைபெற்று வந்த நிலையில் அப்படத்தின் கதை தனக்கு பிடிக்காததால் படத்தில் இருந்து விலகிக் கொண்டார் சூர்யா. இதையடுத்து பாலா வெளியிட்ட அறிக்கையில், நானும் சூர்யாவும் கலந்து பேசி வணங்கான் படத்திலிருந்து சூர்யா விலகிக் கொள்வது என்று முடிவெடுத்து இருக்கிறோம். இதில் எங்களுக்கு வருத்தம் தான். என்றாலும் சூர்யாவின் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு இது என்று கூறியிருந்தார் பாலா.
இந்த நிலையில் தற்போது வணங்கான் படத்தில் சூர்யாவுக்கு பதிலாக அருண் விஜய் நடிக்க கமிட்டாகி உள்ளாராம். இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் 9ம் தேதி மீண்டும் கன்னியாகுமரியில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இதேப்போல் நாயகி கிர்த்தி ஷெட்டியும் விலகிவிட்டதாகவும் அவருக்கும் பதில் வேறு ஒருவர் நடிப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.