ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படப்பிடிப்பு தொடர்ந்து காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பில் விஜய், த்ரிஷா , பிரியா ஆனந்த், கவுதம் மேனன், மிஷ்கின் என பலர் நடித்து வந்தார்கள். இந்த நிலையில் இந்த படத்தின் வில்லன்களில் ஒருவரான இயக்குனர் மிஷ்கின் தனக்கான காட்சிகளில் நடித்து முடித்துவிட்டு சென்னை திரும்பி நிலையில், விஜய் மற்றும் திரிஷாவும் ஒரு சிறிய பிரேக்கிற்காக சென்னை திரும்பி இருந்தார்கள். தற்போது இயக்குனர் கவுதம் மேனன் சம்பந்தப்பட்ட காட்சிகளும் படமாக்கப்பட்டு விட்டதால் அவரும் சென்னை திரும்பி விட்டார். அடுத்தகட்டமாக லியோ படப்பிடிப்பில் முக்கிய வில்லன்களாக நடிக்கும் சஞ்சய்தத், அர்ஜுன் ஆகியோர் கலந்து கொள்ள போகிறார்கள். இவர்கள் இன்னும் ஓரிரு தினங்களில் காஷ்மீர் செல்வதை தொடர்ந்து மீண்டும் விஜய்யும் காஷ்மீர் செல்கிறார். அப்போது விஜய்யுடன் சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் ஆகியோர் மோதும் ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட உள்ளது.