துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் |
தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் எம்கேடி என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட எம்கே தியாகராஜ பாகவதர். பேசாப் படமாக இருந்த சினிமா, பேசும் தமிழ் சினிமாவாக மாறிய பின் எம்கேடி-யின் படங்களுக்கு ரசிகர்களிடம் மிகப் பெரும் வரவேற்பு கிடைத்தது.
1934ம் ஆண்டு வெளிவந்த 'பவளக்கொடி' என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர். 14 திரைப்படங்களில் மட்டுமே நடித்தார். அதில் “பவளக்கொடி, நவீன சாரங்கதாரா, சத்யசீலன், சிந்தாமணி, அம்பிகாபதி, திருநீலகண்டர், அசோக்குமார், சிவகவி, ஹரிதாஸ்” ஆகிய படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தன. அதிலும் 'ஹரிதாஸ்' படம் 1944ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகி மூன்று தீபாவளியைப் பார்த்த படம் என்ற பெருமையுடன் 1946 தீபாவளி வரை ஓடியது.
அந்தக் காலத்தில் பத்திரிகையாளர் லட்சுமிகாந்தன் என்பவர் அவரது பத்திரிகையில் சினிமா பிரபலங்களைப் பற்றி தாறுமாறாக எழுதியவர். அவர் ஒரு நாள் சென்னை, புரசைவாக்கத்தில் கத்தியால் குத்தப்பட்டு மறுநாள் மருத்துவமனையில் மரணமடைந்தார். அந்த வழக்கை விசாரித்த காவல் துறை, நடிகர் எம்கே தியாகராஜ பாகவதர், நடிகர் என்எஸ் கிருஷ்ணன், தயாரிப்பாளர் ஸ்ரீராமுலு உள்ளிட்ட 8 பேரைக் கைது செய்தது. 1944ம் ஆண்டு கைதாகி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட எம்கேடி, என்எஸ்கே தொடர்ந்து மேல் முறையீடு செய்து 1947ம் ஆண்டு விடுதலை பெற்றனர்.
அந்த வழக்குகளின் காரணமாக தனது சொத்துக்கள், பெயர், புகழ் அனைத்தையும் இழந்து வறுமைக்குத் தள்ளப்பட்டார் எம்கேடி. உடல்நலக் குறைவு ஏற்பட்டு 1959ம் ஆண்டு தனது 49வது வயதிலேயே மரணமடைந்தார் எம்கேடி.
அவருக்கு இன்று 114வது பிறந்தநாள். அதை முன்னிட்டு இயக்குனரும் நடிகருமான பார்த்திபன், “தமிழ்நாட்டின் முதல் சூப்பர்ஸ்டார். புகழின் உச்சம் கண்டவர். மிச்சமின்றி சுகபோக வாழ்க்கையை உண்டவர். பன்னீரில் குளித்து கண்ணீரில் முகம் துடைத்தவர். Last reel மிக மோசமான சோகம்! பாடமானது அவரது வாழ்க்கை. அதை படமாக்க திரைக்கதை கூட வைத்துள்ளேன்” என எம்கேடி பற்றிய பயோபிக் படத்தை எடுக்க வேண்டும் என்ற அவருடைய ஆசையை வெளியிட்டுள்ளார்.