நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
அல்லு அர்ஜூன், ராஷ்மிகா நடித்த புஷ்பா படத்தில் வில்லன் சுனிலின் மனைவியாக நடித்தவர் அனுசுயா பரத்வாஜ். சின்னத்திரையில் இருந்து வந்த இவர் இப்போது தெலுங்கில் பல படங்களில் நடிக்கிறார். பல தெலுங்கு ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகவும் தொடருகிறார். சமீபத்தில் தனது கணவருடன் இருக்கும் போட்டோ ஒன்றை பகிர்ந்தார். இதற்கு பலரும் பலவிதமான கருத்துக்களையும், விமர்சனங்களையும் பதிவிட்டு வந்தனர். ஒருவர், ‛‛பணத்திற்காக தான் நீங்கள் இவரை திருமணம் செய்தீர்களா...'' என கேட்டார்.
இதனால் கோபமான அனுஷ்யா அந்த நபருக்கு, ‛‛அவரிடம் மட்டும் தான் பணம் உள்ளதா... ஏன் என்னிடம் இல்லையா... இப்படி சொன்னதற்காக உங்கள் கன்னத்தில் போட்டுக் கொள்ளுங்கள். இல்லையென்றால் உன் கன்னத்தில் செருப்பால் அடிப்பேன். மஞ்சள் காமாலை வந்தவனுக்கு உலகமே மஞ்சளாகத்தான் தெரியும். பணம் மட்டுமே புத்தியாக கொண்டவர்களுக்கு எல்லாமே தவறாகத்தான் தெரியும். தயவு செய்து மாறுங்கள்'' என காட்டமாக எச்சரித்து பதிலடி கொடுத்துள்ளார்.