பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
வெங்கி அட்லூரி இயக்கத்தில் தமிழில் 'வாத்தி', தெலுங்கில் 'சார்' என தனுஷ் நடிக்கும் படம் நாளை வெளியாக உள்ளது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தனித்தனியாக படமாக்கப்பட்டுள்ள இந்தப்படம் மூலம் தெலுங்கில் நேரடியாக அறிமுகமாகிறார் தனுஷ்.
படம் வெளியாகும் தினத்தில் அதிகாலை காட்சிகள், காலை சிறப்புக் காட்சிகள் நடைபெறுவதுதான் தற்போதைய வழக்கம். பொதுவாக ஒரு படம் வெளியாவதற்கு முன்பாக 20 ஆண்டுகளுக்கு முன்பாகத்தான் அதிக அளவிலான பிரிமீயர் காட்சிகள் இங்கு நடைபெற்றன. தற்போது அமெரிக்காவில் மட்டுமே வெளியீட்டிற்கு முன்பாக அப்படிப்பட்ட காட்சிகள் நடைபெற்று வருகின்றன.
இப்போது 'சார்' படத்திற்காகத் தெலுங்கில் இன்றே பல நகரங்களில் பிரிமீயர் காட்சிகளை ஏற்பாடு செய்துள்ளார்கள். ஐதராபாத், விசாகப்பட்டிணம், விஜயவாடா, நெல்லூரி, ராஜமுந்திரி, காக்கிநாடா ஆகிய ஊர்களில் இன்று இரவு பிரிமீயர் காட்சிகள் நடைபெறுகிறது. ஐதராபாத்தில் இன்று இரவு நடைபெறும் நான்கு பிரிமீயர் காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் ஏற்கெனவே விற்றுத் தீர்ந்துவிட்டது.