அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
'பிரேமம்' மலையாளப் படத்தின் மூலம் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். அதன் பிறகு தமிழில் 'கொடி, தள்ளிப் போகாதே' ஆகிய படங்களில் மட்டும் நடித்துளளார். தற்போது தமிழில் 'சைரன்' படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் பல படங்களில் நடித்து முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
அனுபமா அழகான நடிகை மட்டுமல்ல, அழகான குரலுக்கும் சொந்தக்காரர் என்பது இப்போதுதான் தெரிகிறது. நேற்று அவருடைய இன்ஸ்டாகிராம் தளத்தில் ஒரு மேக்கப் அறையில் அவர் தலையில் மல்லிப்பூவை அணிந்து கொண்டபடியே 'வெந்து தணிந்தது காடு' படத்தின் 'மல்லிப்பூ வச்சி வச்சி வாடுதே' பாடலைப் பாடிய வீடியோவைப் பகிர்ந்து, “தமிழ்ப் பாடலை மலையாளத்தில் பாடுவது எனது புது திறமை” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அப்படத்தின் கதாநாயகியாக சித்தி இட்னானியும் 'நைஸ் சாங்' என பாராட்டு தெரிவித்துள்ளார். ரசிகர்கள் பலரும் அவரது குரலின் இனிமையைப் பாராட்டியுள்ளனர். ஒருவர் நடிப்பதை விட்டுவிட்டு பாட முயற்சி செய்யுங்கள் என்றும் கமெண்ட் செய்துள்ளார். அந்தப் பதிவுக்கு மட்டும் ஏழு லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகள் கிடைத்துள்ளன.