வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு |
சிம்புவுடன், குத்து படத்தில் அறிமுகமான ரம்யா, அதற்கு பின், தன் பெயரை, திவ்யா ஸ்பந்தானா என, மாற்றிக் கொண்டார். "வாரணம் ஆயிரம், பொல்லாதவன் ஆகிய படங்களில், அவருக்கு நல்ல வேடங்கள் கிடைத்தாலும், அதற்கு பின், தமிழில் வாய்ப்புகள் இல்லை. இதனால், கன்னட படங்களில் மட்டும் நடித்து வந்த திவ்யாவுக்கு, திடீரென அரசியல் மீது ஆர்வம் வந்ததால், கர்நாடகா அரசியல் களத்தில் கால் பதித்தார். "அரசியலில் தீவிரமாகவுள்ள நடிகையை, படத்தில் நடிக்க வைத்தால் பிரச்னை வருமே என, நினைத்த, இயக்குனர்கள், திவ்யாவுக்கு வாய்ப்பு தர, தயங்கினர். இதையடுத்து, மீண்டும் கோடம்பாக்கத்துக்கு வந்த அவர், தனக்கு தெரிந்த இயக்குனர்கள், ஹீரோக்களை சந்தித்து, நடிக்க வாய்ப்பு தரும்படி கேட்டாராம். ஆனால், யாருமே பாசிடிவ்வான பதில் கூறாததால், ஏமாற்றத்துடன், மீண்டும் பெங்களூருக்கு புறப்பட்டுச் சென்று விட்டாராம்.