காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் |

சினிமா நடிகர்களில் எனது தம்பி பவன் கல்யாண் தனித்துவமான ஒரு நடிகர் என்று கூறியிருக்கிறார் நடிகர் சிரஞ்சீவி. இதுகுறித்து ஒரு டாக் ஷோவில் அவர் பேசும்போது, ஒவ்வொரு பெரிய நடிகர்களுக்கும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் பவன் கல்யாணுக்கு ஏராளமான பக்தர்கள் உள்ளார்கள். இதுபோன்று இந்தியாவில் ஒரு சில நடிகர்கள் மட்டுமே இருக்கிறார்கள். அவர்களில் என் தம்பியும் ஒருவர் என்பதை பெருமையாக சொல்லிக்கொள்வேன்.
அது மட்டுமின்றி 'பவன் கல்யாண், நான் போற்றும் ஒரு அரசியல்வாதி. அவர் ஒரு உண்மையான தலைவர், நேர்மையானவர்' என்றும் தன் தம்பி குறித்து பெருமையாக பேசி இருக்கிறார் நடிகர் சிரஞ்சீவி. தெலுங்கில் சிரஞ்சீவி நடித்த வால்டேர் வீரய்யா படம் சமீபத்தில் திரைக்கு வந்ததை அடுத்து தற்போது போலா சங்கர் என்ற படத்தில் நடித்து வருகிறார்.




