Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

கோழிக்கோடு காவல் நிலையத்தில் தயாரிப்பாளருடன் விசாரணைக்கு ஆஜாரான ரிஷப் ஷெட்டி

14 பிப், 2023 - 13:16 IST
எழுத்தின் அளவு:
Kantara-case-:-Rishab-Shetty-appear-at-kozhikode-court

கேஜிஎப் இரண்டு பாகங்களின் வெற்றியை தொடர்ந்து கன்னடத்திலிருந்து இன்னும் ஒரு வெற்றிப்படமாக வெளியாகி கவனத்தை ஈர்த்த படம் காந்தாரா. தென்னிந்திய மொழிகள் மற்றும் பாலிவுட் என நான்கு மொழிகளிலும் இந்த படம் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி அங்கேயும் வரவேற்பையும் நல்ல வசூலையும் பெற்றது. ஆனால் படம் வெளியான சில வாரங்களிலேயே இந்த படத்தில் இடம்பெற்ற வராஹ ரூபம் என்கிற பாடல் மலையாள திரையுலகில் தனி இசைக்குழுவாக இயங்கி வரும் தாய்க்குடம் பிரிட்ஜ் என்பவர்கள் ஏற்கனவே உருவாக்கிய நவரசம் என்கிற பாடலின் காப்பி என்கிற சர்ச்சை எழுந்தது.

இதையடுத்து தாய்க்குடம் பிரிட்ஜ் இசைக்குழு, கேரளாவில் கோழிக்கோடு மாவட்ட நீதிமன்றத்தில் இதுகுறித்து காந்தாரா தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரான ரிஷப் ஷெட்டி மீது வழக்கு தொடர்ந்தது. அதனையடுத்து காந்தாரா படத்தில் வராஹ ரூபம் பாடலை பயன்படுத்த நீதிமன்றம் தடை விதித்தது. மேலும் இரு தரப்பிலும் மாறிமாறி இந்த வழக்கு கேரள உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் வரை சென்றது.

இந்த வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் பிப்ரவரி 12 மற்றும் 13ஆம் தேதிக்குள் கோழிக்கோடு காவல் நிலையத்தில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் மற்றும் இயக்குனர் ரிஷப் ஷெட்டி இருவரும் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இதனை உறுதி செய்த உச்சநீதிமன்றமும் இவர்கள் இருவரையும் விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிட்டதுடன், ஒருவேளை இந்த வழக்கில் அவர்கள் கைது செய்யப்பட்டால் அவர்களுக்கு உடனடியாக ஜாமீன் வழங்க வேண்டும் என்கிற ஒரு சலுகையையும் வழங்கியது.

இந்த நிலையில் கோழிக்கோடு காவல் நிலையத்தில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் மற்றும் இயக்குனர் ரிஷப் ஷெட்டி இருவரும் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகி தங்களது விளக்கங்களை அளித்தனர். இதுகுறித்து கேரள போலீசார் தரப்பில் கூறும்போது மீண்டும் அவர்களிடம் விசாரணை நடத்த வேண்டிய தேவை ஏற்பட்டால் அவர்கள் மறுபடியும் ஆஜராக வேண்டும் என்றும் போலீஸாரால் கூறப்பட்டுள்ளது. செக்சன் 63 காப்பிரைட் சட்ட விதியின்படி இது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுவதால் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட வாய்ப்பு இருந்தது. அதேசமயம் கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி இவர்கள் இருவருக்குமே கேரள உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
ரசிகர்களை சந்தித்த பிரபாஸ்ரசிகர்களை சந்தித்த பிரபாஸ் பவன் கல்யாணுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் உள்ளனர்! தம்பியை புகழ்ந்த சிரஞ்சீவி பவன் கல்யாணுக்கு லட்சக்கணக்கான ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
21 பிப், 2023 - 05:03 Report Abuse
NicoleThomson எப்பவும் பப்லிசிட்டியை விரும்பும் மலபாண்டிகள் இப்போ இன்னொரு வகையில் அவங்க புத்தியை காட்றாங்க
Rate this:
R S BALA - CHENNAI,இந்தியா
16 பிப், 2023 - 18:04 Report Abuse
R S BALA அந்த பாடலுக்கும் காந்தார பட பாடலுக்கும் எந்த சாயலும் இல்லை..காந்தார பாடலின் இனிமை தாய்க்குடம் நவரசம் பாடலில் இல்லை என்பதே உண்மை..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in