Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழ் சினிமா என்னை மதிக்கவில்லை: சொல்கிறார் வரலட்சுமி

14 பிப், 2023 - 03:16 IST
எழுத்தின் அளவு:
Tamil-cinema-avoiding-me-says-Varalxmi

சரத்குமார் மகள் வரலட்சுமி 'போடா போடி' படத்தின் மூலம் அறிமுகமானார். ஏராளமான படங்களில் நடித்தபோதும் முன்னணி நடிகை என்ற இடத்தை அவரால் பிடிக்க முடியவில்லை. தற்போது தெலுங்கு சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார். குறிப்பாக வில்லி கேரக்டர்களில் வெழுத்து வாங்குகிறார். அவருக்கென்னு அங்கு தனி ரசிகர் பட்டாளமே உருவாகி உள்ளது.

இந்த நிலையில் தமிழ் சினிமா என் திறமையை மதிக்கவில்லை. நல்ல கலைஞர்களை தவறவிடுகிறது என்று கூறுகிறார். வரலட்சுமி தற்போது தமிழில் 'கொன்றால் பாவம்' என்ற படத்தில் நடித்துள்ளார். இதனை கன்னட இயக்குனர் தயாள் பத்மநாபன் இயக்கியுள்ளார். இந்த படம் தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்த வரலட்சுமி கூறியதாவது:

இந்த படத்தில் நடிக்க 2 வருடங்களுக்கு முன்பே ஒப்புக் கொண்டேன். அவ்வளவு அருமையான கதை. எனது கேரியரில் வித்தியாசமான படமாக இருக்கும். நான் அதிக தமிழ் படங்களில் நடிக்கவில்லை. தெலுங்கு படங்களுக்குத்தான் முக்கியத்தும் கொடுக்கிறேன் என்கிறார்கள். தமிழில் வாய்ப்பு வந்தால்தானே நடிப்பதற்கு. நானே படம் தயாரித்து, நானே நடித்துக் கொண்டிருக்க முடியுமா? தெலுங்கில் வாய்ப்புகள் வருகிறது நடிக்கிறேன். அதிக படங்களில் நடிப்பதால் ஐதராபாத்திலேயே செட்டிலாகி விட்டேன். ஒரு நடிகையாக எங்கு வாய்ப்பு கிடைக்கிறதோ அங்குதானே இருக்க முடியும்.

தமிழ் சினிமாவில் 9 வருடங்களாக கிடைக்காத புகழும், அங்கீகாரமும், அன்பும் தெலுங்கில் கிடைத்தது. 'க்ராக்' படத்தில் 'ஜெயம்மா' என்ற கேரக்டரில் நடித்தேன். ஆந்திர ரசிகர்கள் என்னை ஜெயம்மா என்று கொண்டாடுகிறார்கள். இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என் திறமையை மதித்து வாய்ப்பு தருகிறார்கள்.

தமிழில் 'தாரை தப்பட்டை' படத்தில் உயிரை கொடுத்து நடித்தேன். அதற்கு பிறகு எனக்கு வாய்ப்பு குவிந்திருக்க வேண்டும், சர்கார் படத்திற்கு பிறகாவது வாய்ப்பு குவிந்திருக்க வேண்டும் ஆனால் நடக்கவில்லை. ஆனாலும் என்னை வளர்த்த தமிழ் சினிமா மீது எனக்கு எப்போதும் அன்பு உண்டு. இங்கு வாய்ப்புகள் குவிந்தால் இங்கும் அதிக படங்களில் நடிப்பேன். மீண்டும் சென்னைக்கே குடி வந்து விடுவேன். என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'ஆஸ்கர் நாமினீஸ் லன்ச்சான்' நிகழ்ச்சியில் 'ஆர்ஆர்ஆர்' இரட்டையர்'ஆஸ்கர் நாமினீஸ் லன்ச்சான்' ... தயாரிப்பாளர் சங்க தேர்தலுக்கு எதிராக வழக்கு : நாளை விசாரணை தயாரிப்பாளர் சங்க தேர்தலுக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in