ஜெயம் ரவியை வைத்து இரண்டு இரண்டாம் பாக படங்களை இயக்கும் மோகன் ராஜா | படைப்பாளிகளை அவமதிக்கும் செயல் : ஞானவேல் ராஜாவிற்கு பாரதிராஜா கண்டனம் | ஹிந்தி படத்தை இயக்கும் அஜய் ஞானமுத்து | சொந்த வீடு கனவை நனவாக்கிய சரண்யா | கன்னடத்தில் ஹீரோயினாக வரவேற்பு பெற்ற தமிழ் சீரியல் நடிகை | கார்த்தியுடன் நடிக்கும் சீரியல் நடிகை | சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் மகேஷ் பாபு? | கங்குவா படத்தில் ராணா? | தெலுங்கைத் தொடர்ந்து தமிழில் ரீ ரிலீஸ் ஆகும் முத்து | மகாநதி தொடரில் என்ட்ரி கொடுக்கும் திவ்யா கணேஷ் |
உலக அளவிலான சினிமா விருதுகளில் அதிக மதிப்புடையதாகக் கருதப்படுவது அமெரிக்காவில் வழங்கப்படும் ஆஸ்கர் விருது. இந்த ஆண்டிற்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் இந்தியத் திரைப்படமான 'ஆர்ஆர்ஆர்' படத்தில் இடம் பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த பாடலுக்கான விருதுக்குத் தேர்வாகியுள்ளது.
விருதுக்கு முன்பாக ஆஸ்கர் விருதுக்காகத் தேர்வாகியுள்ள 'நாமினீஸ்' அனைவரும் கலந்து கொள்ளும் 'ஆஸ்கர் நாமினீஸ் லன்ச்சான்' நிகழ்ச்சி நேற்று இரவு கலிபோர்னியா, பெவர்லி ஹில்ஸ், த பெவர்லி ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றுள்ளது. அந்த விழாவில் டாம் க்ரூஸ், ஹாங் சாவ், ஆஸ்டின் பட்லர், ஸ்டீபன் ஸ்பீல் பெர்க், மைக்கேல் வில்லியம்ஸ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
'நாட்டு நாட்டு' பாடலுக்கு இசையமைத்த கீரவாணி, பாடலை எழுதிய சந்திரபோஸ் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். அப்போது ஸ்டீபன் ஸ்பீல் பெர்க் உள்ளிட்ட பல ஹாலிவுட் பிரபலங்களை அவர்கள் சந்தித்துப் பேசியுள்ளனர்.
அடுத்த மாதம் மார்ச் 12ம் தேதி 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது. அதில் 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த பாடலுக்கான விருதைப் பெறுமா என்ற எதிர்பார்ப்பு இந்திய சினிமா ரசிகர்களிடம் எழுந்துள்ளது.