குஷ்புவின் எக்ஸ் தளத்தை முடக்கிய ஹேக்கர்கள் | சம்மரில் சூடு பிடிக்கும் தமிழ் சினிமா | மண்டாடி : திறமையான கூட்டணியுடன் களமிறங்கும் சூரி | ரீ என்ட்ரி தரும் அப்பாஸ் | திருமணம் பற்றி த்ரிஷா சொன்ன 'தக் லைப்' | நள்ளிரவில் போன் செய்து கஞ்சா கேட்டார் : மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் மீது தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்கள்...!! | இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் |
உலக அளவிலான சினிமா விருதுகளில் அதிக மதிப்புடையதாகக் கருதப்படுவது அமெரிக்காவில் வழங்கப்படும் ஆஸ்கர் விருது. இந்த ஆண்டிற்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் இந்தியத் திரைப்படமான 'ஆர்ஆர்ஆர்' படத்தில் இடம் பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த பாடலுக்கான விருதுக்குத் தேர்வாகியுள்ளது.
விருதுக்கு முன்பாக ஆஸ்கர் விருதுக்காகத் தேர்வாகியுள்ள 'நாமினீஸ்' அனைவரும் கலந்து கொள்ளும் 'ஆஸ்கர் நாமினீஸ் லன்ச்சான்' நிகழ்ச்சி நேற்று இரவு கலிபோர்னியா, பெவர்லி ஹில்ஸ், த பெவர்லி ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றுள்ளது. அந்த விழாவில் டாம் க்ரூஸ், ஹாங் சாவ், ஆஸ்டின் பட்லர், ஸ்டீபன் ஸ்பீல் பெர்க், மைக்கேல் வில்லியம்ஸ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
'நாட்டு நாட்டு' பாடலுக்கு இசையமைத்த கீரவாணி, பாடலை எழுதிய சந்திரபோஸ் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். அப்போது ஸ்டீபன் ஸ்பீல் பெர்க் உள்ளிட்ட பல ஹாலிவுட் பிரபலங்களை அவர்கள் சந்தித்துப் பேசியுள்ளனர்.
அடுத்த மாதம் மார்ச் 12ம் தேதி 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது. அதில் 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த பாடலுக்கான விருதைப் பெறுமா என்ற எதிர்பார்ப்பு இந்திய சினிமா ரசிகர்களிடம் எழுந்துள்ளது.