சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பவன் கல்யாண் மகன் | ஹாலிவுட் திரைப்படங்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கும் சீனா | 2028 முதல் ஆஸ்கர் விருதுகளில் சேர்க்கப்படும் 'ஸ்டன்ட் டிசைன்' | லோகேஷ் கனகராஜ் 'டிரெண்ட்'-ஐ தொடரும் மற்ற இயக்குனர்கள் | 22 படங்களுடன் கெத்து காட்டும் ஓடிடி தளங்கள் | குட் பேட் அக்லி - முதல் நாள் வசூல் 50 கோடி கடக்குமா? | பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் |
நெல்சன் திலீப் குமார் இயக்கிய கோலமாவு கோகிலா, டாக்டர் மற்றும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் உள்பட பல படங்களில் நடித்தவர் ரெடின் கிங்ஸ்லி. தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் தயாரிப்பாளர் மணிகண்டன் என்பவர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் ரெடின் கிங்ஸ்லி மீது ஒரு புகார் அளித்திருக்கிறார்.
அந்த புகாரில், நடிகர் ரெடின் கிங்ஸ்லியால் எங்கள் நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. லெக்பீஸ் என்ற படத்தில் நடிக்க 10 நாட்கள் கால்சீட் கொடுத்துவிட்டு நான்கு நாட்கள் மட்டுமே அவர் நடித்துள்ளார். அவரால் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் அந்த தொகையை அவரிடம் இருந்து மீட்டு தருமாறும், அதுவரை அவர் படங்களில் நடிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ரெடின் கிங்ஸ்லியிடம் தயாரிப்பாளர் சங்கம், என்ன நடந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறது.