டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

கடந்து சில நாட்களாகவே இந்தியாவின் மிக முக்கியமான நகரங்களில் ஒன்றான ஜெய்சல்மர், மீடியாக்களில் அதிகம் இடம் பிடித்து வருகிறது. காரணம் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு தற்போது அங்கே நடைபெற்று வருவது தான். தற்போது அங்கே நடந்து வரும் படப்பிடிப்பில் ரஜினிகாந்த், ஜாக்கி ஷெராப் ஆகியோர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் மோகன்லால் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஐதராபாத்தில் படமாக்கப்பட்டு விட்டாலும் அவரும் தற்போது ஜெய்சல்மரில் முகாமிட்டுள்ளார்.
அதுமட்டுமல்ல மலையாள நடிகர் பிரித்விராஜ் தனது மனைவி சுப்ரியாவுடன் ஜெய்சல்மருக்கு வருகை தந்துள்ளார். இவர்கள் இருவரும் நேற்று நடைபெற்ற சித்தார்த் மல்கோத்ரா, கியாரா அத்வானி திருமணத்திற்காக வந்தார்கள் என்று சொல்லப்பட்டாலும் இவர்கள் மட்டுமல்ல, இன்று நடிகர் கமலும் கூட ஜெய்சல்மாருக்கு வருகை தருகிறார். காரணம் பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான வால்ட் டிஸ்னி கம்பெனியின் இந்திய பிரெசிடெண்ட் ஆன கே மாதவன், தனது மகன் திருமண நிகழ்விற்காக தான் திரையுலக பிரபலங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த நிகழ்வில் ஏற்கனவே ஜெய் சல்மரில் படப்பிடிப்பில் இருக்கும் ரஜினிகாந்த், காஷ்மீரில் தற்போது படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வரும் விஜய் ஆகியோரும் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.




