ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
2023ம் ஆண்டு இரண்டு பெரிய நடிகர்களான 'வாரிசு, துணிவு' ஆகிய படங்கள் தியேட்டர்களுக்குக் கொஞ்சம் தெம்பைத் தந்தன. எப்படியோ இரண்டு வாரங்களாவது அந்தப் படங்களை வைத்து ஓட்டிவிட்டார்கள். அதற்குப் பிறகு கடந்த வாரம் பிப்ரவரி 3ம் தேதி வெளியான ஆறு படங்கள் தியேட்டர்களை நிறையவே தடுமாற வைத்துள்ளன.
அதில் சில படங்களுக்கு படம் வெளியான முதல் நாளே தியேட்டர்களுக்கு ரசிகர்கள் வராமல் 'ஷோ பிரேக்' ஏற்பட்டுள்ளது. 'ரன் பேபி ரன்' மட்டும் சில நாட்களுக்கு கொஞ்சம் ரசிகர்களை வரழைத்துள்ளது. மற்ற படங்கள் நிலை நிறையவே மோசம் என்கிறார்கள். தியேட்டர்களுக்கு மக்களை வரவழைக்க எந்த ஒரு திட்டமும் அந்தப் படங்களைத் தயாரித்த நிறுவனங்களிடம் இல்லாததுதான் அதற்குக் காரணம் என தியேட்டர் வட்டாரங்களில் சொல்கிறார்கள்.
சென்னை போன்ற பெரு மாநகரங்களிலேயே பல தியேட்டர்களில் அந்தப் படங்களுக்கு ஷோ பிரேக் நடந்துள்ளது என அதிர்ச்சித் தகவலையும் தருகிறார்கள். இன்று பிப்ரவரி 10ம் தேதி “டாடா, கொடை, கூட்டம், நினைவே நீ, வர்ணாஸ்ரமம், வசந்த முல்லை” ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படங்களில் எதற்குக் கொஞ்சமாவது கூட்டம் வரும் எதற்கு ஷோ பிரேக் வரும் என்ற ஒரு அதிர்ச்சியிலேயே தியேட்டர்காரர்கள் இருக்கிறார்களாம்.
சிறிய பட்ஜெட் படங்களை ஓட்ட சிறு பிளான் எதையாவது செய்வார்களா என பல வருடங்களாகத் தியேட்டர்காரர்கள் கேட்டு வருகிறார்கள். ஆனால், அது யார் காதிலும் விழுந்ததாகத் தெரியவில்லை.