‛பொன்னியின் செல்வன் 2' : ‛அக நக' முதல்பாடல் வெளியானது | அதிதி ஷங்கரின் அடுத்த படம் | தனுசுடன் மீண்டும் இணையும் மாரி செல்வராஜ் | விஜய் சேதுபதியை இயக்கும் மிஷ்கின் | இயற்கை விவசாயத்தில் இறங்கிய நடிகர் கிஷோர் | படப்பிடிப்பில் தவறாக நடந்தாரா யஷ்? - ஸ்ரீநிதி ஷெட்டி விளக்கம் | நிதின் பிறந்தநாள் அன்று ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் | விஷ்ணுவர்தன் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது | ரிலீஸுக்கு தயாராகும் வணங்காமுடி ; டப்பிங் பணிகள் தீவிரம் | தன்னுடன் ஜோடியாக நடித்த நடிகையை பிளாக் செய்து பின் அன்பிளாக் செய்த அல்லு அர்ஜுன் |
துணிவு படத்தை அடுத்து அஜித் குமார் நடிக்கும் 62 வது படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசை அமைக்கிறார். இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. கதையில் ஏற்பட்ட குழப்பத்தால் இந்த படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகி உள்ளார். இந்தப்படம் தொடர்பாக தனது சமூகவலைதளத்தில் பதிவிட்ட விஷயங்களை நீக்கினார் விக்னேஷ் சிவன்.
இந்தநிலையில் தற்போது மகிழ் திருமேனி சொன்ன கதை கிட்டத்தட்ட அவருக்கு ஓகே ஆகிவிட்டதாம். ஆனபோதிலும் படத்தில் ஆங்காங்கே மாஸான ஆக்சன் காட்சிகள் இடம் பெற வேண்டும் என்று கூறிய அஜித்குமார், அதுபோன்ற காட்சிகள் எந்தெந்த இடத்தில் இடம்பெற வேண்டும் என்றும் கூறியுள்ளாராம். அதையடுத்து அவர் சொன்னது போலவே தற்போது அந்த கதையில் திருத்தம் செய்து வருகிறார் மகிழ்திருமேனி. தற்போது தனது குடும்பத்தாருடன் வெக்கேஷனுக்காக வெளிநாடு சென்றுள்ள அஜித்குமார், இந்தியா திரும்பியதும் அவரது 62 வது படம் குறித்த அடுத்த அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.