நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
தற்போது நெல்சன் இயக்கி வரும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். அவருடன் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராப், யோகி பாபு உட்பட பலர் இந்த படத்தில் நடிக்கிறார்கள். தற்போது இந்த ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு ஜெய்பூரில் நடைபெற்று வருகிறது. அதேபோல் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன்-2 படப்பிடிப்பும் ஆந்திரா வனப்பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் கமலுடன் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது ரஜினியின் ஜெயிலர் படமும், கமலின் இந்தியன்-2 படமும் ஒரே நாளில் திரைக்கு வர இருப்பதாக ஒரு தகவல் தற்போது கோலிவுட்டில் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் இதற்கு முன்பு ரஜினியின் சந்திரமுகி, கமலின் மும்பை எக்ஸ்பிரஸ் படங்கள் 2005ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி திரைக்கு வந்த நிலையில், 18 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது மீண்டும் ரஜினி - கமல் நடித்த படங்கள் ஒரே நாளில் திரைக்கு வரப் போகின்றன.