22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக இருப்பவர் த்ரிஷா. கடந்தாண்டு இவரது நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் 2 படம் த்ரிஷாவிற்கு மீண்டும் ஒரு புதிய மார்க்கெட்டை உருவாக்கி தந்துள்ளது. அந்தவகையில் நடிகர் விஜய் உடன் 14 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளார் த்ரிஷா.
‛மாஸ்டர்' படத்திற்கு பின் விஜய்யும், இயக்குனர் லோகேஷ் கனகராஜூம் மீண்டும் இணைந்துள்ளனர். விஜய் 67 என தற்காலிகமாக குறிப்பிடப்பட்டுள்ள இந்த படத்தில் ஏகப்பட்ட திரைநட்சத்திரங்கள் இணைந்துள்ளனர். நேற்று முதல் அது தொடர்பான அப்டேட் வெளியானது. நேற்றைய அறிவிப்பில், “சஞ்சய் தத், பிரியா ஆனந்த், சாண்டி, மிஷ்கின், மன்சூரலிகான், மாத்யு தாமஸ், கவுதம் மேனன், அர்ஜுன்” ஆகியோர் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. இன்று த்ரிஷா இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய்யும், திரிஷாவும் இதற்கு முன் கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி என நான்கு படங்களில் நடித்துள்ளனர். இப்போது 5வது முறையாக இவர்கள் இணைகின்றனர். அதுவும் 14 ஆண்டுகளுக்கு பின் இணைந்து நடிக்கின்றனர். தற்போது விஜய் 67 படப்பிடிப்பு காஷ்மீரில் நடக்கிறது. இதற்காக விஜய், திரிஷா, பிரியாமணி, லோகேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் தனி விமானம் மூலம் அங்கு சென்றனர்.