ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக இருப்பவர் த்ரிஷா. கடந்தாண்டு இவரது நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் 2 படம் த்ரிஷாவிற்கு மீண்டும் ஒரு புதிய மார்க்கெட்டை உருவாக்கி தந்துள்ளது. அந்தவகையில் நடிகர் விஜய் உடன் 14 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளார் த்ரிஷா.
‛மாஸ்டர்' படத்திற்கு பின் விஜய்யும், இயக்குனர் லோகேஷ் கனகராஜூம் மீண்டும் இணைந்துள்ளனர். விஜய் 67 என தற்காலிகமாக குறிப்பிடப்பட்டுள்ள இந்த படத்தில் ஏகப்பட்ட திரைநட்சத்திரங்கள் இணைந்துள்ளனர். நேற்று முதல் அது தொடர்பான அப்டேட் வெளியானது. நேற்றைய அறிவிப்பில், “சஞ்சய் தத், பிரியா ஆனந்த், சாண்டி, மிஷ்கின், மன்சூரலிகான், மாத்யு தாமஸ், கவுதம் மேனன், அர்ஜுன்” ஆகியோர் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. இன்று த்ரிஷா இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய்யும், திரிஷாவும் இதற்கு முன் கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி என நான்கு படங்களில் நடித்துள்ளனர். இப்போது 5வது முறையாக இவர்கள் இணைகின்றனர். அதுவும் 14 ஆண்டுகளுக்கு பின் இணைந்து நடிக்கின்றனர். தற்போது விஜய் 67 படப்பிடிப்பு காஷ்மீரில் நடக்கிறது. இதற்காக விஜய், திரிஷா, பிரியாமணி, லோகேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் தனி விமானம் மூலம் அங்கு சென்றனர்.