சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

வாரிசு படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்கிறார் விஜய். இது இவரின் 67வது படமாக உருவாகிறது. கடந்த ஜன., 2 முதல் படப்பிடிப்பு துவங்கியது. சென்னையில் ஒருக்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்தது. நாளை(பிப்.,1) முதல் காஷ்மீரில் படப்பிடிப்பு துவங்குகிறது. இதற்காக விஜய், லோகேஷ், திரிஷா, பிரியா ஆனந்த் உள்ளிட்ட படக்குழுவினர் தனி விமானம் மூலம் காஷ்மீர் சென்றனர்.
நேற்று முதல் இந்த படத்தின் அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர். அந்தவகையில் இசையமைப்பாளராக அனிருத், ஸ்டன்ட் இயக்குனர்களாக அன்பறிவு உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு வந்தது. இன்று(ஜன., 31) படத்தில் நடிக்கும் நடிகர்கள் பற்றிய அறிவிப்பை ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை அறிவித்தனர்.
அந்தவகையில் ஹிந்தி நடிகர் சஞ்சய் தத், நடிகை பிரியா ஆனந்த், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, இயக்குனர் மிஷ்கின், நடிகர் மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் 67 படம் மூலம் முதன்முறையாக தமிழில் களமிறங்குகிறார் சஞ்சய் தத். படத்தில் அவர் வில்லனாக தோன்றுகிறார். மேலும் சாண்டி, மிஷ்கின், மன்சூர் அலிகான் உள்ளிட்டோரும் வில்லன்களாக நடிக்க உள்ளனர்.