மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

வாரிசு படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்கிறார் விஜய். இது இவரின் 67வது படமாக உருவாகிறது. கடந்த ஜன., 2 முதல் படப்பிடிப்பு துவங்கியது. சென்னையில் ஒருக்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்தது. நாளை(பிப்.,1) முதல் காஷ்மீரில் படப்பிடிப்பு துவங்குகிறது. இதற்காக விஜய், லோகேஷ், திரிஷா, பிரியா ஆனந்த் உள்ளிட்ட படக்குழுவினர் தனி விமானம் மூலம் காஷ்மீர் சென்றனர்.
நேற்று முதல் இந்த படத்தின் அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர். அந்தவகையில் இசையமைப்பாளராக அனிருத், ஸ்டன்ட் இயக்குனர்களாக அன்பறிவு உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு வந்தது. இன்று(ஜன., 31) படத்தில் நடிக்கும் நடிகர்கள் பற்றிய அறிவிப்பை ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை அறிவித்தனர்.
அந்தவகையில் ஹிந்தி நடிகர் சஞ்சய் தத், நடிகை பிரியா ஆனந்த், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, இயக்குனர் மிஷ்கின், நடிகர் மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் 67 படம் மூலம் முதன்முறையாக தமிழில் களமிறங்குகிறார் சஞ்சய் தத். படத்தில் அவர் வில்லனாக தோன்றுகிறார். மேலும் சாண்டி, மிஷ்கின், மன்சூர் அலிகான் உள்ளிட்டோரும் வில்லன்களாக நடிக்க உள்ளனர்.




